குடவாசல், ஜூலை 12 - திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியம் திரு மிழிமிழலை ஊராட்சியில் 2020-2021 ஆம் ஆண்டுக் கான உளுந்து மற்றும் பயிறுக் கான காப்பீட்டு தொகை வழங்கியதில் நடைபெற்ற முறைகேட்டை கண்டித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக செவ்வாய்க்கிழமை தென்கரை கடைவீதியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு விவ சாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வி.எஸ்.கலியபெருமாள் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலா ளர் எம்.சேகர் முன்னிலை வகித்தார். சங்கத்தின் ஒன்றிய செயலாளர் வீ.ராஜ துரை, தலைவர் எஸ்.ராஜேந்திரன், சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர்கள் டி.வீரபாண்டின், கே. தமிழ்ச்செல்வி, குடவாசல் வடக்கு ஒன்றிய செயலாளர் கே.ரவிச்சந்திரன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். பயிர் காப்பீட்டுக்கான தொகையை இனி தனியார் கம்பெனிகளிடம் செலுத்தும் முறையை நிறுத்தி, விவ சாயிகளுக்கான பயிர் காப்பீட்டு தொகையை அரசை பெற வேண்டும். ஒன்றிய அரசு விவசாயி களை வஞ்சித்து தனியாரிடம் தாரைவார்க்கும் செயலை கைவிட வேண்டும் உள்ளிட்ட முழக்கம் எழுப்பப்பட்டன.