districts

img

விவசாயிகள் சங்க உறுப்பினர் பதிவு மாநிலத் தலைவர் பெ.சண்முகம் துவக்கி வைத்தார்

குடவாசல், அக். 5 - திருவாரூர் மாவட்டம் கொரடாச் சேரி ஒன்றியத்தில் உள்ள பெருந்திர குடி ஊராட்சி புலியூர் கிராமத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசா யத் தொழிலாளர் சங்கத்தின் சந்தாப் பதிவை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம் துவக்கி வைத்து திருவாரூர் மாவட் டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.  சந்தா பதிவு நிகழ்ச்சியில் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, விவசாயி கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.சேகர், விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் எம். கலைமணி, சிபிஎம் ஒன்றியச் செயலா ளர் டி.ஜெயபால் மற்றும் விவசாயி கள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம், வெகுஜன அரங்கத்தினர் கலந்து கொண்டனர். இரு அமைப்பு களைச் சேர்ந்த 2000 உறுப்பினர்கள், சந்தாவுக்கான தொகையை விவசாயி கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ. சண்முகத்திடம் வழங்கினர்.