districts

img

காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்

திருவாரூர், ஜூலை 15 - தமிழ்நாடு முதலமைச்சர் அரசுப் பள்ளிகளில் காலை உண வுத் திட்டத்தை செயல்படுத்தி வரு கிறார். இதன் தொடர்ச்சியாக ஒன்று  முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் அரசு உதவிபெறும் பள்ளி களில் இத்திட்டம் திங்களன்று முதல்  விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டத் தினை தமிழக முதல்வர் திருவள்ளூ ரில் தொடங்கி வைத்தார்.

இதனொரு பகுதியாக டெல்டா  மாவட்டங்களில் இத்திட்டத்தின் விரி வாக்கம் துவக்கி வைக்கப்பட்டது. 

திருவாரூர் வட்டம், தப்பளாம் புலியூர் ஊராட்சியில் ஸ்ரீகிருஷ்ணா அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளியில் விரிவுபடுத்த முதலமைச் சரின் காலை உணவு திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ மற்றும் நாகப் பட்டினம் நாடாளுமன்ற உறுப்பி னர் வை.செல்வராஜ், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே. கலைவாணன் ஆகியோர் பங்கேற்றனர். 

மாவட்டத்தின் கிராமப்புற பகுதிகளில் 750 அரசுப் பள்ளி களிலும், பேரூராட்சி பகுதிகளில் 27 அரசுப் பள்ளிகளிலும் என  மொத்தம் 777 பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 61 அரசு உதவிபெறும் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் தொடங்கப் பட்டு 4601 மாணவ, மாணவியர்கள் பயன்பெறுகின்றனர். ஊரகப் பகுதிகளில் 38,124 மாணவ, மாணவியர்களும், பேரூராட்சி பகுதி களில் 1,980 மாணவ, மாணவியர் களும் என மொத்தம் 838 பள்ளி களில் பயிலும் 40,104 மாணவ,  மாணவியர்கள் பயன் பெறுகின்றனர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம் திருக்கா னூர்பட்டி புனித மரியன்னை அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் தீபக்  ஜேக்கப் முன்னிலையில், சட்ட மன்ற உறுப்பினர்கள் துரை.சந்திர சேகரன் (திருவையாறு), டி.கே.ஜி.நீலமேகம் (தஞ்சாவூர்), தஞ்சா வூர் மாநகராட்சி மேயர் சண்.இராம நாதன் ஆகியோர் மாணவ-மாண வியர்களுடன் அமர்ந்து உணவு உண்டனர்.

பேராவூரணி பகுதியில் மூன்று இடங்களில் காலை உணவு திட்டம் துவக்கப்பட்டது. பேராவூரணியை அடுத்த ஒட்டங்காடு ஸ்ரீ கருப்பையா உடையார் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பேராவூரணி சட்ட மன்ற உறுப்பினர் நா.அசோக் குமார் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்து மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து உணவு  சாப்பிட்டார். மேலும், மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை  பார்வையிட்டு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். 

தொடர்ந்து, துறவிக்காடு கலைமகள் அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளியிலும், புனல்வா சல் கிழக்கு ஜெயலட்சுமி அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியி லும் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

கும்பகோணம்

கும்பகோணம் சட்டமன்ற தொகுதி, கொரநாட்டுக்கருப்பூர் ஊராட்சி, பெரியகருப்பூரில் அமைந் துள்ள அரசு உதவிபெறும் தொடக் கப் பள்ளியில், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை  க.அன்பழகன், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவாக் கம் செய்து தொடங்கி வைத்தார். 

பாபநாசம்

பாபநாசம் அருகே ஏரிவேளூர் ஊராட்சி, ஏரி சரசுவதி அரசு உதவிப் பெறும் பள்ளியில் முதல மைச்சரின் காலை உணவுத் திட்ட தொடக்கவிழா நடந்தது. வட்டாரக் கல்வி அலுவலர் 

பாபநாசம் அருகே திருவை யாத்துக்குடி புனித தாமஸ் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளி யில் பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹி ருல்லா காலை உணவுத் திட்டத்தை  தொடங்கி வைத்தார். சரபோஜி ராஜபுரம் சரஸ்வதி அம்பாள் அரசு உதவிபெறும் ஆரம்பப் பள்ளி யிலும் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு நோட்டு, பென்சில் வழங்கப்பட்டது.

செம்பனார்கோவில் 

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் வட்டாரத்திற் குட்பட்ட பரசலூர் அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளியில், தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமை  வகித்தார். பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன்,  மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர்  உமா மகேஷ்வரி சங்கர், செம்ப னார்கோவில் ஒன்றியக்குழுத் தலை வர் நந்தினி ஸ்ரீதர் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 99 ஊராட்சியில் 115 அரசு உதவி பெறும் பள்ளிகளில் இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 6691 மாணவர்கள் பயனடைவர். 

நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளி களில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. கீழ்வேளூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட இரட்டைமதகடி அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி மாணவர்களுக்கு உணவு பரிமாறி தொடங்கி வைத்தார். பின்பு, குழந்தைகளோடு சேர்ந்து உணவு சாப்பிட்டார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் செந் துறை அருகேயுள்ள குமிழியம் மங்கையர்கரசி அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், மாணவ, மாணவிகளுக்கு காலை உணவை வழங்கி தொடக்கி வைத்தார். 

இதன்முலம் மாவட்டத்திலுள்ள 37 அரசு உதவிபெறும் பள்ளி  மாணவ, மாணவிகள் பயன்பெறு வர் என்றார். முன்னதாக அவர் அப்பள்ளியில் வைக்கப்பட்டிருந்த காமராஜர் படத்துக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஜா. ஆனிமேரி ஸ்வர்ணா தலைமை வகித்தார். 

லிங்கத்தடிமேடு வள்ளலார் கல்வி நிலையத்தில் காலை உண வுத் திட்டத் தொடக்கி வைத்த சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா,  இந்த திட்டத்தை பள்ளி மாணவ, மாணவிகள் முழுமையாக பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

ஜெயங்கொண்டம் ஒன்றியத் திற்குட்பட்ட 9 பள்ளிகளும், தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள 5 பள்ளிகளும் அடங்கும். இதில் தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீழ மைக்கேல்பட்டி புனித மிக்கேல் அரசு உதவிபெறும் பள்ளியில் காலை  உணவு திட்டத்தினை ஜெயங்கொண் டம் எம் எல் ஏ க.சொ.க.கண்ணன் தொடங்கி வைத்தார், தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு உணவு களை பரிமாறியதுடன், மாணவர் களுடன் அமர்ந்து சாப்பிட்டார். 

இத்திட்டத்தின் மூலம் தா.பழூர் ஊராட்சியில் 5 பள்ளிகள், ஜெயங் கொண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 9 பள்ளிகள் என மொத்தம் 14  பள்ளிகளில் இத்திட்டம் செயல் படுத்தப்பட்டுள்ளது.