districts

img

15 குடும்பங்கள் சிபிஎம் கட்சியில் இணைந்தனர்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் அனுமந்தபுரம் கிராமத்தில் எ.சேகர் தலைமையில் 15 குடும்பங்கள் பல்வேறு அரசியல் கட்சியில் இருந்து விலகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் டி.ஜான்கென்னடி தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எம்.சேகர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.எஸ்.கலியபெருமாள், பி.கந்தசாமி, மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.சுமதி, விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் வி.பூஷாந்திரம், விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் பி.காளியப்பன், வி.தொ.ச ஒன்றியச் செயலாளர் டி.அண்ணாதுரை ஆகியோர் கட்சியில் இணைந்தவர்களை வாழ்த்தி வரவேற்றனர்.