திருவள்ளூர்,டிச.12- கடம்பத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆற்றங்கரை ஓரமாக வசிக்கும் இருளர் இன மக்கள் கடந்த ஒரு வார மாக பெய்து வரும் மழையால் உணவிற்கு வழியின்றி தவித்து வந்தனர். இந்த நிலையில் திங்களன்று (டிச 12) தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு அம்மக்களை சந்தித்து ஆறுதல் கூறியதோடு அம்மக்களுக்கு திருவள்ளூர் வட்டாட்சியர் மதியழகன் மூலம் 22 குடும்பத்திற்கு தலா 10 கிலோ அரிசி, ஒரு கிலோ எண்ணைய், ஒரு கிலோ துவரம்பருப்பு ஆகிய வற்றை வழங்க ஏற்பாடு செய்தனர். மேலும் புயல்காற்றில் சேத மடைந்த ஓலை குடிசைகள் மீது போர்த்த பிளாஸ்டிக் தார் பாய் வழங்க வேண்டும் என கோரிக்கையும் விடுத்துள்ள னர்.