districts

img

குறைந்தபட்ச ஊதிய ஆணையை அரசு வெளியிடாததால் முதலாளிகள் பலன் சிஐடியு மாநில துணைத் தலைவர் கே.விஜயன் குற்றச்சாட்டு

திருவள்ளூர், ஏப்.12- திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலை பகுதி,  பூச்சியத்திப்பேடு அருகில் உள்ள வேப்பம்பட்டில் பிலிப்கார்ட் பன்னாட்டு நிறுவனத்திற்கு சொந்த மான  மிகப்பெரிய குடோன் அமைந்துள்ளது.  இந்த நிறுவனம் கடந்த 6 ஆண்டுகளாக செயல்பட்டு வரு கிறது. இதில் 300 மேற்பட்ட இளை ஞர்கள் 5 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த தொழிலாளர்களாக பணி யாற்றி வருகின்றனர்.10 மணி நேரம் வரை குடோனில் உள்ள மளிகைக் பொருட்கள் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை பார்சல் செய்து ஆன்லைன் மூலம் வரும் ஆர்டர்களுக்கு அனுப்பி வைக்கும் பணியை மிகவும் குறைந்த சம்பளத்தில் செய்து வருகின்றனர். இந்த சூழலில் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப,  ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என கேட்டதற்கு 10 தொழிலாளர்களை நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து குடோன் வேறு இடத்திற்கு மாற்ற முயற்சித்து வரு கின்றனர். இந்நிலையில் ஊதிய உயர்வு, பி.எப், இஎஸ்ஐ போன்ற வற்றை வழங்க வேண்டும், குடோனை வேறு இடத்திற்கு மாற்ற கூடாது தொழிலாளர்கள்  வலியுறுத்தி யுள்ளனர். கே.விஜயன் இதில் கலந்து கொண்ட சிஐடியு மாநில துணைத் தலைவர் கே.விஜயன் பேசுகையில்,  கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கும் சட்டம் கடந்த 7 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு வெளி யிடாததால் இந்த பிலிப்கார்ட் நிறு வனம் மட்டும் ஒரு கோடி ரூபாய் லாபம் பெற்றுள்ளது. இப்படி முதலாளி களுக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு செயல்படுகிறது. காவல்துறையும் தொழிலாளர்களை மிரட்டுகிறது. தொழிலாளர்களுக்கு விரோதமாக செயல்படுவதை அரசு மாற்றிக் கொள்ள வேண்டும் என்றார். போராட்டத்திற்கு ஊத்துக் கோட்டை வட்டார பொது தொழி லாளர் சங்கத்தின் செயலாளர் சி.பாலாஜி தலைமை தாங்கினார்.இதில் சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், பொருளாளர் என்.நித்தியானந்தம், மாவட்ட துணைத் தலைவர் ஏ.ஜி.சந்தானம், விவசாய  சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜி.சம்பத், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ஏ.ஜி.கண்ணன், உள்ளாட்சி ஊழியர் சங்கத்தின் பொருளாளர் ஜெ.ரமேஷ் ஆகியோர் பேசினர்.