திருவள்ளூர், ஜூன் 19- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கும்மிடிப்பூண்டி வட்ட மாநாடு ஞாயிறன்று (ஜூன் 19) கும்மிடிப்பூண்டியில் நடை பெற்றது. மாநாட்டிற்கு மாவட்ட குழு உறுப்பினர் பி.கருணாமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் எம்.சிவகுமார் வரவேற்றார்.மாவட்ட குழு உறுப்பினர் ஆண்டவன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார்.வட்டச் செயலாளர் எம்.ரவிகுமார் அறிக்கையை முன்மொழிந்தார். சங்கத்தின் மாநில பொருளாளர் கே.பி.பெருமாள் துவக்கி வைத்து பேசினார்.மாவட்ட தலைவர் ஜி.சம்பத் மாநாட்டை முடித்து வைத்து பேசினார்.வெங்கடேசன் நன்றி கூறினார். தலைவராக எம்.ரவிகுமார், செய லாளராக எம்.சிவகுமார், பொருளாளராக என்.வெங்கடேசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும், சுற்றுச்சூழல் மாசை கட்டுப்படுத்தவேண்டும், மாணவர்களின் கல்வி கடனை வங்கிகள் தள்ளுபடி செய்ய வேண்டும், குடிமனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.