districts

img

திருவள்ளூர் மாணவியின் உடல் அடக்கம்

திருவள்ளூர், ஜூலை 27- திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி கீழச்சேரியில் தற்கொலை செய்து கொண்ட 12 ஆம் வகுப்பு மாணவியின் உடல் சொந்த ஊரில்  அடக்கம் செய்யப்பட்டது. திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அரசி ஸ்ரீவத்சன் தலைமையில் பிரேதபரிசோதனை முழு  வீடியோ பதிவு செய்யப்பட்டது. இந்நிலை யில் மாணவியின் உறவினர்கள் பிரேத பரிசோ தனையின் போது உள்ளே அனுமதிக்காததால் உடலை வாங்க போவதில்லை என்றும், முன்னுக்கு பின் முரணாக தகவல் அளித்த பள்ளி நிர்வாகம் மீது காவல்துறை எந்த நடவடிக் கையும் எடுக்காததால் உடலை வாங்க போவ தில்லை எனவும் உறவினர்கள் தெரிவித்ததால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் மக்கள் பிரதிகளின் முன்னிலை யில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சரளாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் அரசிடமிருந்து இழப்பீட்டுத் தொகை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன், எஸ் சந்திரன் ஆகியோர் வாய்மொழி உத்தரவாதம் அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்ட மாணவியின் உடலை சரளாவின் சகோதரர் சரவணன், தாயார்  முருகம்மாளிடம் ஒப்படைத்தனர். பிறகு, சொந்த  ஊருக்கு கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.
சிபிஎம் ஆறுதல்
திருத்தணி வட்டம் சூரிய நகரம் ஊராட்சி தெக்களூரில் நடந்த இறுதி நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்ற மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பி னர் எஸ்.கண்ணன், திருவள்ளூர் மாவட்டச் செயலா ளர் எஸ்.கோபால், மாநிலக் குழு உறுப்பினர் நம்புராஜன், திருத்தணி வட்டச் செயலாளர் அந்தோணி ஆகியோர் மாணவி சரளாவின் சகோ தரர் சரவணனை சந்தித்துஆறுதல் கூறினர்.