districts

img

29 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த பட்டா: மலைவாழ் மக்கள் போராட்டம் வெற்றி

திருவள்ளூர், மார்ச் 21- ஊத்துக்கோட்டை அருகே வசிக்கும் வேட்டைக் காரன் இன மக்களுக்கு 29 ஆண்டுகளுக்கு பிறகு பட்டா வழங்கப்பட்டதால் காத்திருப்பு போராட்டத்தை திரும்பப் பெற்றனர். திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகி லுள்ள வேளகாபுரத்தில் வேட்டைக்காரன் இன  மக்கள் பல தலைமுறை களாக வாழ்ந்து வருகின் றனர். இம்மக்களுக்கு 1960 ஆம் ஆண்டில் 20 தொகுப்பு  வீடுகள் கட்டிக் கொடுத்த னர். அந்த வீடுகளை அன்றைய முதலமைச்சர் காமராஜர் வேளகாபுரம் கிராமத்திற்கு நேரடியாக வந்து திறந்து வைத்தார்.  ஆனாலும், அந்த வீடுக ளுக்கு பட்டா வழங்கப்பட வில்லை. பல்வேறு போராட் டங்களுக்கு பிறகு, 1994 ஆம் ஆண்டு 85 நபர்களுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் வீட்டு மனைப்பட்டா வழங்கி னார். அதுவும் 29  ஆண்டு காலமாக வரு வாய்த்துறையினர் கிராமக் கணக்கில் பதிவேற்றும் செய்யவில்லை. இதனையடுத்து, பல முறை அதிகாரியிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த ஆண்டில், மார்ச் மாதத்தில் ஊத்துக்கோட்டை வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த அமைதி பேச்சு வார்த்தையில், ஒரு மாதத் திற்குள் கிராமக் கணக்கில் பதிவேற்றும் செய்யப்படும் என்றும் அந்தப் பகுதியில் விடுப்பட்ட 90 ஆதிதிராவிடர் குடும்பத்திற்கு மூன்று  மாதத்தில் பட்டா வழங்கப் படும் என்றும் வட்டாட்சியர் எழுத்து பூர்வமாக உறுதி யளித்திருந்தார். 12 மாதங்களை கடந்தும்  வாக்குறுதி நிறைவேற்றப் படவில்லை. இந்த நிலையில், தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் செவ்வாயன்று (மார்ச் 21) ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மீண்டும் காத்திருக் கும் போராட்டம் நடை பெற்றது. இதில், 29 ஆண்டு களுக்கு முன்பு வழங்கப் பட்ட பட்டாவை கிராம கணக்கில் பதிவேற்றம் செய்ய வேண்டும், 60  ஆண்டுகளாக காத்திருக் கும் விடுபட்ட ஆதிதிரா விடர் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச்  செயலாளர் ஆர்.தமிழ் அரசு தலைமை தாங்கினார். தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன் னேற்ற சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இ.கங்காதுரை, மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஏ.வி.சண்முகம், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.பன்னீர்செல்வம், விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜி.சம்பத், விவசாய தொழி லாளர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ஏ.ஜி.கண்ணன், மாவட்டப் பொரு ளாளர் என்.கங்காதரன், விவசாய சங்கத்தின் மாவட்ட  துணைத் தலைவர் பி.ரவி, மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி கள் கே.செல்வராஜ், கே.முரு கன், கே.விஜி, வேட்டைக் காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட தலைவர் டி.டில்லி, மாவட்ட செயலாளர் ஜி. ராஜா உட்பட்ட பலர் கலந்து  கொண்டனர்.
5 நபர்களுக்கு பட்டா
இதனையடுத்து, ஊத்துக்கோட்டை வட்டாட்சி யர் சாந்தி பேச்சுவாத்தை நடத்தினார். அப்போது, அடுத்த வாரத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதை ஏற்க மறுத்த  தலைவர்கள் போராட் டத்தை தொடர்ந்தனர். பிறகு, வேளகாபுரம் கிராமத் திற்கு நேரில் சென்று வட்டாட் சியர் ஆய்வு மேற் கொண்டார். பின்னர் உடனடி யாக 5 குடும்பத்திற்கு பட்டாவை வழங்கினார். விடு பட்ட அனைவருக்கும் மார்ச் 27 அன்று பட்டா வழங்கப் படும் என உறுதியளித்தார்.