districts

img

அலைக்கழிக்கும் அதிகாரிகள்: விவசாயிகள் ஆவேச மறியல்

திருவண்ணாமலை, மே 31- திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு சார்பில் அமைத்துள்ள நேரடி கொள் முதல் நிலையங்களில் விவசாயி களிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதற்கு, ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால் தற்போது ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விவசாயிகள், திரு வண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம் முன்பு இரண்டு நாட்களாக காத்துக் கிடக்கின்றனர். விவசாயிகளிடம் மனுவை வாங்க அதிகாரிகள் மறுத்ததால் நீண்ட நேரம் வெயிலில் காத்துக் கிடந்த னர். இதனால் ஆவேசமடைந்த விவ சாயிகள், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் டி.கே.வெங்கடேசன் தலைமையில் திரு வண்ணாமலை- போளூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு, காவல் துறையினர் சமா தானம் செய்து அலுவலகத்திற்கு அழைத்துச் செல்ல முற்பட்டனர். நீண்ட நேரம் வெயிலில் காத்துக் கிடப்பதால் உடல் சோர்வு ஏற்படுகிறது. எனவே, அலுவலக வளாக மரத்தடியில் நிற்பதற்கு அனுமதிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனாலும் அலுவலக கேட்டை பூட்டிய நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள், விவசாயிகளை உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் ஆவேசமடைந்த விவசாயிகள் கேட்டை உடைத்துக் கொண்டு அலுவலகத்திற்குள் சென்றனர். அதன்பிறகு, மனுக்களை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் ஆன் லைனில் பதிவு செய்ய நடவடிகை எடுக்கப்படும் என்றனர்.