districts

img

மலக்குழி-விஷவாயு மரணங்களை தடுக்கவேண்டும்

திருவண்ணாமலை, ஜூலை 19- துப்புரவு பொறியியல் துறை பாடப்பிரிவு உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்க வேண்டும். மலக்குழி - விஷவாயு மரணங்கள் தடுக்க வேண்டும்.  மனித கழிவு மற்றும் சாக்கடை அடைப்புகளை அகற்ற மனிதர்களை ஈடுபடுத்துவதை தடை செய்யும் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் திருவண்ணாமலை அறிவொளி பூங்கா அருகில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

மாவட்டத் தலைவர் எஸ்.ராமதாஸ் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம். சிவக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம். வீரபத்திரன், எம்.பிரகலநாதன், முன்னணி யின் மாநில துணை பொதுச் செயலாளர் ப. செல்வன், தலித் விடுதலை இயக்க மாநில இளைஞரணி செயலாளர் என். ஏ. கிச்சா, மகளிர் அணி செயலாளர் தலித் நதியா, ஆதித்தமிழர் பேரவை செயலாளர் கந்தன், பன்னியாண்டிகள் நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் குப்புசாமி உள்ளிட்ட பலர் பேசினர்.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா நகராட்சி அலுவலகம் முன்பு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் துப்புரவு தொழிலாளர் சங்கம் சார்பில் வெள்ளியன்று (ஜூலை19) பி.ரகுபதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

எ.பி.எம். சீனிவாசன், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆ.தவராஜ், உள்ளாட்சி ஊழியர் சங்கம் செயலாளர் சி.கோதண்டபாணி, பொருளாளர் ஜி. ஹேமாவதி,  டி.சந்திரன், நிலவு குப்புசாமி, அ.கலைவாணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.