districts

img

தரமற்ற தார்சாலை: மக்கள் கொதிப்பு

திருவண்ணாமலை,ஜூன்.5- திருவண்ணாமலை அடுத்த பாலி யப்பட்டு கிராமப்பகுதியில்  தரமற்ற தார் சாலை அமைக்கப்பட்டுள்ளதால் அதை பயன்படுத்த முடியாத நிலை யில் கிராம மக்கள் உள்ளனர். திருவண்ணாமலை-செங்கம் சாலை யில் உள்ள பெரிய கோலாப்பாடி கிராமத்திலிருந்து பாலியப்பட்டு வரை கடந்த சில தினங்களுக்கு முன்பு தார் சாலை போடப்பட்டது. மிக மெல்லியதாக மண் தரையில் தண்ணீரில் நனைக்கப்பட்ட பேப்பர் போர்த்தியதை போன்று உள்ளது அந்த சாலை. செருப்பு அணியாமல் வெறும் காலில் நடந்தால் மட்டுமே அந்த சாலை தாங்குகிறது. செருப்புடன் நடந்தாலும் சைக்கிள் அல்லது இரு சக்கர வாகனம் ஓட்டினத்தை ஓட்டிச் சென்றாலோ தார் முழுமையாக பெயர்ந்து விடுகிறது.  தரமின்றி தார்ச் சாலை அமைக்கப் பட்டதால் சாலை ஆங்காங்கே உள்வாங்கி, பள்ளம் போல் காட்சி யளிக்கிறது. வெறும் விரல்களால் தோண்டும் போதே, தார் கையில் வருகிறது. வெயில் நேரத்தில் வாகனத்தை சாலையில் நிறுத்தினால், சில நிமிடங்களில் தார் கரைந்து வண்டி கீழே விழுந்துவிடுகிறது.  தரமற்ற சாலை அமைத்த ஒப்பந்த தாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மீண்டும் இந்த சாலையை தரமாக போட வேண்டும் என்றும் கிராம மக்களும் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாலியப்பட்டு கிளைச் செயலாளர் பெரியசாமி, யுவராஜ் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதுகுறித்து புகார் மனுவும் கொடுத்துள்ளனர்.