திருவண்ணாமலை,பிப்.16- திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சி 21 ஆவது வார்டு தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வேட்பாளராக ந.ராதா கிருஷ்ணன் போட்டியிடுகிறார். வேட்பாளர் ராதா கிருஷ்ணனை ஆதரித்து அரசு போக்கு வரத்துக் கழகம், மின்வாரிய ஊழியர்கள் வீதி வீதியாக பிரச்சாரம் செய்தனர். வந்தவாசி 21 ஆவது வார்டில் போட்டி யிடும் வேட்பாளர்களில் நம்பிக்கைக்குறிய வேட்பாளர் ந.ராதாகிருஷ்ணன், அவருக்கு நாங்கள் வாக்களிப்போம் என்று பெண்கள் மற்றும் பொது மக்கள் கூறினர். இந்த பிரச்சாரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ப.செல்வன், பாரி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் அப்துல்காதர், சிவராமன், முரளி, அரசு போக்குவரத்துக் கழக சங்க நிர்வாகிகள் நாகராஜன், சேகர், பிரகாஷ், முத்து, பாஸ்கர், ஓய்வு பெற்றோர் அரங்க நிர்வாகிகள் சவுகத்அலி, பஞ்சாட்சரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை நகரத்தில் மதச் சார்பற்ற முற்போக்குகூட்டணி சார்பில் உள்ளாட்சி நகரமன்ற தேர்தலில் போட்டி யிடும் தி.மு.க.வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் கட்யூனிஸ்ட் கட்சி திருவண்மணாலை நகரகுழுசார்பில் வார்டு.4,5,2,7,15,28,ஆகிய வார்டுகளில் பிரச்சாரம் நடைபெற்றது. நகர செயலாளர் எம்.பிரகலநாதன், மற்றும் நகர குழு நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.