districts

திருவண்ணாலையில் கள்ளச்சாராயம் அழிப்பு

திருவண்ணாமலை, அக்.5- திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயனுக்கு கிடைத்த தகவலையடுத்து, கடலாடி காவல் ஆய்வாளர் லட்சுமிபதி தலைமையில் நடந்த தேடுதல் வேட்டையில் கலசபாக்கம் வட்டம், காந்தபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சிவசங்கர் வீட்டில் சுமார்  90 லிட்டர் கள்ளச்சாராயம் கண்டுபிடிக்கப்பட்டு கீழே கொட்டி அழிக்கப்பட்டது. இதேபோல் கலசபாக்கம் வட்டம், வீரலூர்  கிராமத்தைச் சேர்ந்த வேலு என்ப வர் வடகரை நம்மியந்தல்  கிராம விவசாய நிலத்தில் சுமார் 30 லிட்டர்  கள்ளச் சாராயமும், நாவக்கரை கிராமத்தில் சாந்தி என்பவரின் வீட்டின் பின்புறம் சுமார் 75 லிட்டர் கள்ளச்சாராயம் பதுக்கி வைத்தி ருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு கீழே கொட்டி அழித்தனர். மேலும் கெங்காபுரம் கிராமத்தில் சுமார் 150 லிட்டர் கலாச்சாராய ஊரல் கண்டு பிடிக்கப்பட்டு கீழே கொட்டி அழிக்கப் பட்டது. இந்த சம்பவங்களில் தலைமறை வாகியவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.