திருவண்ணாமலை அடுத்த வட ஆண்டபட்டு கிராமத்திற்கு அரசு பேருந்து இயக்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வெள்ளியன்று (மார்ச் 4) ஆர்.அபிமாறன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் ம.ப.நந்தன், மாவட்ட நிர்வாகிகள் சி.எம்.பிரகாஷ், ஆர்.சரவணன், முன்னாள் மாவட்ட நிர்வாகி எஸ்.ராமதாஸ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் ப.செல்வன், விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகி அழகேசன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.பிரகலநாதன், விவசாயிகள் சங்க நிர்வாகி பலராமன், மலைவாழ் மக்கள் சங்கம் ஏகாம்பரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.