திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் கிளையில் விவசாயிகள் நிலங்களை அடமானம் பெற்று பணம் வழங்குவதில் விதிமீறல் செய்ததை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் மணி, சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம். சிவக்குமார், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பலராமன், டி. கே வெங்கடேசன், உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.