districts

img

சைக்கிள் பயணத்தில் பங்கேற்ற இளம் பெண்களுக்கு பாராட்டு

திருவண்ணாமலை, ஏப்.28- இளைஞர்களுக்கு வேலை கேட்டு செவ்வா யன்று (ஏப். 26) திரு வண்ணாமலை மாவட்டத் தில் சைக்கிள் பயணக் குழு பிரச்சாரத்தை தொடங்கியது.    திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் இருந்து மாவட்டச் செய லாளர் சி.எம்.பிரகாஷ் தலை மையில் தொடங்கிய சைக்கிள் பிரச்சார பய ணம் கலசபாக்கம், ஆத மங்கலம் புதூர், காஞ்சி, புதுப்பாளையம் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் செய்தது. செங்கத்தில் பொதுக்கூட்டம் நடை பெற்றது. அதைத் தொடர்ந்து புதனன்று செங்கத்தில் துவங்கிய பயணக்குழு, இறையூர், சாத்தனூர், தண்டராம்பட்டு வழியாக திருவண்ணாமலை சென்றது. அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வாலி பர் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் ம.பா.நந்தன், முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் எம்.வீரபத்திரன், எம்.பிரகலநாதன் ஆகியோர் பேசினர். இந்த பயண குழுவில் அத்திமூர் கிராமத்தை சேர்ந்த வி.பிரபாவதி (13), எம்.பிரியங்கா (14), எம்.சினேகா (18) அகிய 3 இளம் பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மாதர் சங்கம் சார்பில் சால்வை அணி வித்து வாழ்த்து தெரி விக்கப்பட்டது. படித்த இளைஞர் மற்றும் இளம் பெண்களின் வேலை வாய்ப்புக்காக போராடும், வாலிபர் சங்க நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டு வாலிபர் சங்கத்தில் இணைந்ததாக அந்த இளம் பெண்கள் தெரிவித்தனர்.