திருப்பூர், செப்.13- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயற்குழு உறுப்பி னர் தோழர் கே.தங்கவேல் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி திருப் பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடைப்பிடிக்கப்பட்டது. திருப்பூர் தெற்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற் குழு உறுப்பினருமான தோழர் கே.தங்க வேல் 3 ஆம் ஆண்டு நினைவு தினம், வள்ளிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் தலைமையில் பெருமா நல்லூரில் கடைபிடிக்கப்பட்டது. இந்நி கழ்ச்சியில், கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் பி.கே.கருப்புசாமி, விவ சாய சங்கம் ஒன்றிய தலைவர் கே.ரங்க சாமி, கிளை செயலாளர்கள் கே.சுப்பிர மணியம் எம்.கே.கோவிந்தசாமி, ஜி. சண்முகம், வி.கே.சாமிநாதன், விவ சாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலை வர் பரணி சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அதேபோல அங்கேரிபாளையம், ஸ்ரீ நகர் ஆகிய பகுதிகளிலும் நினைவஞ் சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
தாராபுரம்:
அதேபோல தாராபுரத்தில் தோழர் கே.தங்கவேல் மூன்றாம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி தாலூக்கா செயலாளர் என்.கனகராஜ் தலைமை யில் நடைபெற்றது. இதில் கட்சி அணியி னர் பலர் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.
ஊத்துக்குளி:
ஊத்துக்குளி தாலுக்கா கமிட்டி அலு வலகம் முன்பு கட்சியின் தாலுக்கா செய லாளர் எஸ்.கே.கொளந்தசாமி தலை மையில் நினைவு அஞ்சலி நடைபெற் றது. இந்நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார், மாவட்டக்குழு உறுப்பினர் கு.சரஸ்வதி, ஆர்.எஸ். கிளைச் செயலாளர் கே.ஏ.சிவசாமி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தாலுக்கா செயலாளர் பாலமுரளி உள் ளிட்ட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். கருவம்பாளையம் தோழர் கே.தங்கவேல் 3 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி, முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் கருவம்பாளை யம் தோழர் கிட்டப்பன் 32ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி
கருவம்பாளையம்
கிளை அலுவலகத்தில் அனுசரிக்கப் பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ராஜகோபால், தெற்கு மாநகர செய லாளர் டி.ஜெயபால், மாவட்ட குழு உறுப்பினர் கே.கணேசன், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் செ.மணிகண் டன், மாநகர குழு உறுப்பினர் எஸ்.பானு மதி, கிளைச் செயலாளர் ஜி.சுரேஷ் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.