திருப்பூர், நவ.27 – தமிழ்நாடு அரசு கட்டுமா னத் தொழிலாளர் நலவாரி யத்தின் ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்களின் சங்க அமைப்புக் கூட்டம் காங்கே யத்தில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட கட்டிட கட்டுமானத் தொழிலாளர் சங் கத்தின் சார்பில் நலவாரியத் தின் மூலம் ஓய்வூதியம் பெறும் தொழிலாளர் சங்க அமைப்பு கூட்டம் காங்கேயம் உடையார் கால னியில் செவ்வாயன்று நடைபெற்றது.
நலவாரிய ஓய்வூதியம் பெறுவோருக்கு, ஓய்வூதியத்தை ரூ.3ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். ஓய்வூதியம் பெரும் தொழிலாளிகள் மரணமடைந்தால் இயற்கை மரண உதவித்தொகை வழங்க வேண்டும். 10ஆம் தேதிக்குள் அனைத்து ஓய்வூதியர்க ளுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஓய்வூதியர்கள் கூட்டத்திற்கு கண்ணையன் தலைமை ஏற்றார்.
இந்தக் கூட்டத்தில் ஓய்வூதி யர்கள் சங்கம் அமைப்பது, சிறப்புத் தலைவ ராக எம்.கணேசன், தலைவராக பாரதி, செய லாளராக கண்ணையன், உதவித் தலைவராக மணியன், உதவிச் செயலாளராக பாலகி ருஷ்ணன் ஆகியோர் செயல்படுவது என முடிவு செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் 500க்கும் மேற் பட்ட நலவாரிய ஓய்வூதியதாரர்கள் கட்டு மானத் தொழிலாளர் சங்கத்தில் இருக்கிறார் கள்.
அனைத்து இடைக் கமிட்டிகளிலும் ஓய் வூதியதாரர்களின் அமைப்புக் கூட்டங்களை நடத்தி வரும் ஜனவரி மாதம் மேற்கண்ட கோரிக்கைகளுக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் சம்மேளனத்தின் பொதுச் செய லாளர் டி.குமார் சிறப்புரை ஆற்றினார். மாவட் டத்தலைவர் எம்.கணேசன், காங்கேயம் தாலுகா கமிட்டி செயலாளர் பாரதி, மாவட்டத் துணைத்தலைவர் கண்ணையன், காங்கே யம் தாலுகா கமிட்டிoத் தலைவர் வீராசாமி உள்பட நலவாரிய ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.