districts

சிபிஎம் மாவட்ட மாநாடு: அவிநாசியில் நன்றி அறிவிப்பு கூட்டம்

அவிநாசி, டிச.9 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் 24 ஆவது திருப்பூர் மாவட்ட  மாநாட்டில் பணியாற்றிய வரவேற் புக் குழுவினருக்கு நன்றி தெரிவிக் கும் கூட்டம் திங்களன்று நடைபெற் றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருப்பூர் மாவட்ட 24ஆவது மாநாடு அவிநாசியில் டிசம்பர் 1,2 ஆகிய தேதிகளில் நடைபெற்று முடிந் துள்ளது. இந்த மாநாட்டை சிறப்பாக  நடத்தி முடிக்க வரவேற்புக் குழு  அமைக்கப்பட்டு, அதில் பல்வேறு பணிகளுக்கான குழுக்கள் அமைக் கப்பட்டு 80க்கும் மேற்பட்டோர் பங் கேற்றனர்.  

அவிநாசி ஒன்றிய கிராமப் பகுதி,  திருமுருகன்பூண்டி நகராட்சி, அவி நாசி பேரூராட்சி, அவிநாசி புதிய  பேருந்து நிலையம் முதல், ஆட்டை யாம்பாளையம் வரை கொடி தோர ணங்கள், சுவர் விளம்பரங்கள் பதா கைகள், ஒலிபெருக்கி வாகனங்கள் மூலமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு முன்வைக்கிற தீர்மா னங்கள், இரண்டு நாள் வாகன பிரச்சா ரமாக கொண்டு சென்றனர். மேலும்  மாநாட்டில் 40-க்கும் மேற்பட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டு எதிர்கா லத்தில் போராட்ட வடிவங்கள் குறித் தும் 280 பிரதிநிதிகள் கலந்து கொண்டு விவாதித்தனர். இதில் டிசம் பர் 1ஆம் தேதி நடைபெற்ற சிவப்புச்  சீருடை பேரணியில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்று கோரிக் கைகள் முழக்கங்களை எழுப்பினர்.

இது, அவிநாசி வணிகர்கள் மத்தியில்  பேசும் பொருளாக இருக்கிறது. இந்த மாநாட்டில் பணியாற்றியோ ருக்கு அவிநாசி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத் தில் நன்றி அறிவிப்பு கூட்டம் ஒன்றியக்  கவுன்சிலர் பி. முத்துசாமி தலைமை யில் நடைபெற்றது. இதில் முத்து சாமி பேசுகையில் பலர் என்னிடம் தெரிவித்த கருத்து, ஒரு சார்பின ருக்கு மட்டும் வருமானம் மற்றொரு தரப்பினருக்கு வருமானம் இல்லை என்று கூறினர், என்ன என்று கேட்ட போது, டீக்கடைகளும் உணவகங்க ளும் வியாபாரம் நடைபெற்றது டாஸ் மார்க் கடையில் வியாபாரம் நடை பெறவில்லை என தெரிவித்தது.

மகிழ்ச்சி அளித்தது என்றார்.  இதைத் தொடர்ந்து கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ச. நந்தகோபால், மாநிலக்குழு உறுப்பி னர் கே.காமராஜ், மாவட்டச் செயலா ளர் செ.முத்துக்கண்ணன், மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.பத்ரி ஆகி யோர் வாழ்த்திப் பேசினர்.

இதில்  நீலகிரி மாவட்டச் செயலாளர் பாஸ்கர்,  அவிநாசி ஒன்றியச் செயலாளர் ஏ. ஈஸ்வரமூர்த்தி, மாவட்டக்குழு உறுப் பினர் ஆர்.பழனிச்சாமி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கிளைச் செய லாளர் உட்பட கலர் கலந்து கொண்ட னர். மேலும் மதுரையில் நடைபெறும்  அகில இந்திய மாநாட்டில் இங்கி ருந்து தோழர்களை பெரும் எண் ணிக்கையில் பங்கேற்கச் செய்ய வேண்டும், அதற்குண்டான தயா ரிப்பை தற்பொழுதிருந்தே துவங்க  வேண்டும், தீக்கதிர் சந்தாவை அதிகப்படுத்த வேண்டும், அகில இந்திய மாநாட்டு நிதியைப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என தலைவர்கள் கூறினர். மாவட்ட மாநாட்டிற்கு பணியாற்றிய குழு ஒருங்கிணைப்பாளர்களுக்கு பய னடை அணிவித்து நன்றி தெரிவித்த னர்.