பல்லடத்தில் மோடியை விமர்சனம் செய்த தள்ளுவண்டி வியாபாரியை பாஜகவினர் தாக்கிய சம்பவம் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் பாதுகாப்பு விவகாரத்தில் பஞ்சாப் அரசு அஜாக்கிரதையாக செயல்பட்டதாக குற்றம்சாட்டி பாஜகவினர் தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பாஜவினர் நடத்திய மனிதச் சங்கிலி ஆர்பாட்டத்தின்போது சாலை ஓர தள்ளுவண்டி வியாபாரி ஒருவர் மோடியின் ஆட்சியில் மக்கள் துயரங்களை தான் அனுபவித்து வருகிறார்கள் என்று காரசாரமாக விமர்சித்து பேசியுள்ளார்.
இதனையடுத்து ஆத்திரமடைந்த பாஜகவினர் தள்ளுவண்டி வியாபாரியை கீழே தள்ளிவிட்டு தாக்குதலில் ஈடுபட்டனர்.