districts

img

‘மத்தியில் பாஜக ஆட்சி நீடிப்பது தமிழ்மொழி, பண்பாட்டிற்கு ஆபத்து’

திருநெல்வேலி, ஏப். 2- பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந் தால் தமிழ்மொழி, பண்பாட்டிற்கு ஆபத்து என்று நடிகரும், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளருமான வாகை சந்திர சேகர் வாக்காளர்களை எச்சரிக்கை செய்தார். நெல்லையில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு சேகரித்து அவர் மேலும் பேசியிருப்பதாவது: “மத்தியில் ஆட்சியில் இருப்ப வர்கள் மீண்டும் ஆட்சிக்குவர துடிக்கிறார்கள். இனி பாஜக ஆட்  சிக்கு வந்தால், ஏதோ ஒரு அரசி யல் கட்சி 2 முறை ஆட்சி நடத்தி யது, 3-ஆவது முறையாகவும் ஆட்சி நடத்தப் போகிறது என நாம்  எடுத்துக் கொள்ளக் கூடாது.

ஏனென்றால் இதுதான் இந் தியா வின் தலை எழுத்தை நிர்ணயிக்கக் கூடிய தேர்தல். மீண்டும் பாஜக  ஆட்சிக்கு வரக்கூடாது, அப்படி அவர்கள் வந்தால் இனி நாடாளு மன்றத்திற்குத் தேர்தலே நடக்காது.  ராணுவ ஆட்சியாக, சர்வாதிகார ஆட்சியாக இருக்கும். நமது சுதந்தி ரம் முழுமையாகப் பறிக்கப்படும். ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேர்  தல் என்ற அளவிற்குக் கொடுமை யான ஒரு முடிவுக்கு வந்தால், கல்  தோன்றா காலத்தே முன் தோன்றிய  மூத்த மொழியான தமிழுக்கு, தமிழ்ப் பண்பாட்டிற்கு ஆபத்து. இப்படி ஒரு பேராபத்து பெரி யார், அண்ணா, கலைஞர் காலத் தில் கூட வந்தது இல்லை.

ஆனால்  இன்று வந்துள்ள அந்த ஆபத் தைப் பெரியாராக, அண்ணாவாக, கலைஞராக நின்று அதனை முறி யடித்து வருகிறார் முதல்வர் ஸ்டா லின். பாஜகவுக்கு அனைத்து மாநி லத்திலும் ஓட்டுப் போடுகிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் ஓட்டுப் போடு வதில்லை என்ற கோவத்திலே, தமிழ்நாட்டிற்கு எந்த நிதியும் தர வில்லை. ஆனால், அத்தனை திட்  டங்களையும் தானே முயற்சி செய்து திறம்பட நடத்திக் காட்டி யுள்ளார். எனவே நாம் 40க்கு 40 வெற்றி யைப் பெற்றால்தான் மத்தியில் பாஜக ஆட்சியை அகற்ற முடி யும். இந்த பேராபத்திலிருந்து இந்தி யாவைக் காக்க முடியும். எனவே, மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.” இவ்வாறு வாகை. சந்திரசேகர் பேசியுள்ளார்.