திருநெல்வேலி, டிச. 25 - திருநெல்வேலி மாவட்டத்தில், அதிகனமழை வெள்ளத்தால் உயிரி ழந்த 11 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் மற்றும் கால்நடை கள் இழப்பு மற்றும் முழுமையாக சேதமடைந்த குடிசை வீடுகள் இழப்புக்கு தலா ரூ. 10 ஆயிரம் என நிவாரணத் தொகையை தமிழ்நாடு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை - வெள்ளத்திற்கு 16 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் விகிதம் 80 லட்சம் ரூபாய், 67 மாடுகள் இழப்பிற்கு ரூ. 37 ஆயிரத்து 500 விகிதம் 25 லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாய், வீடுகளை இழந்த 1064 குடும்பங்களுக்கு ரூ. 10 ஆயிரம் விகிதம் விகிதம் 1 கோடியே 64 லட்சம் ரூபாய், ஆடுகள் இழப்புக்கு 504 குடும்பங்களுக்கு ரூ. 4 ஆயிரம் விகிதம், 20 லட்சத்து 16 ஆயிரத்து ரூபாய், கன்று இழப்புக்கு 135 குடும்பங்களுக்கு தலா ரூ. 20 ஆயிரம் விகிதம் மொத்தம் 27 லட்சம் ரூபாய், கோழி இழப்புக்கு 28 ஆயிரத்து 392 பேருக்கு, நபர் ஒன்றுக்கு 100 ரூபாய் விகிதம் 28 லட்சத்து 39 ஆயிரத்து 200 ரூபாய் என மொத்தம் ரூ. 2 கோடியே 87 லட்சத்து 7 ஆயிரத்து 700 வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இதில்தான் முதற்கட்டமாக கன மழை வெள்ளத்திற்குப் பலியான 11 பேரின் குடும்பங்கள் மற்றும் கால்நடை மற்றும் குடிசைகளை இழந்த 10 பேருக்குமாக மொத்தம் 21 நபர்களுக்கு ரூ. 58 லட்சத்து 14 ஆயிரம் நிவாரணத் தொகையை அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் வழங்கினார்.
அப்போது, “நெல்லை மாவட்டத்தில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களில் முதல் கட்டமாக 11 பேருக்கு ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் கொடுத்துள் ளோம். இதுதவிர கால்நடை. வீடுகளை இழந்தோருக்கு சர்வே எடுத்து முதல்கட்ட நிவாரண தொகை அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து நிவாரணமும் வழங்கப்படும்” என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.