திருநெல்வேலி , ஜூன் 12- சாதி ஆதிக்கவாதிகளால் படு கொலை செய்யப்பட்ட இந்திய ஜனநா யக வாலிபர் சங்க நெல்லை மாவட்ட நிர்வாகி அசோக்கின் 5ஆம் நினைவு தின அஞ்சலி நிகழ்ச்சி திருநெல்வேலி கரையிருப்பு நினைவிடத்தில் நடை பெற்றது.
அனைத்திந்திய ஜனநாயக வாலிபர் சங்க நெல்லை மாவட்டப் பொருளாள ராக இருந்தவர் தோழர் அசோக். மக்க ளுக்காக பல்வேறு போராட்டம் நடத்திய இவர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கரையிருப்பு ரயில்வே கேட் அருகில் சாதி ஆதிக்கவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார்.இதனை அடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வாலிபர் சங்கம், மாணவர் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் பெரும் போராட்டம் நடத்தின. தோழர் அசோக் மறைந்து ஐந்து ஆண்டுகள் முடிவடைந்து 6ஆவது ஆண்டான புதன் கிழமையன்று நெல்லை மாநகரம் கரையிருப்பில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு இருந்து பேரணி தொடங்கியது.
இந்த பேரணிக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன் தலைமை வகித்தார். சிபிஎம் மத்தியக்குழு உறுப்பி னர் ஆர். கருமலையான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா ளர் க.ஸ்ரீராம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மோகன், எம். சுடலைராஜ், பெருமாள் மற்றும் தொழிற்சங்க, வாலிபர், மாணவர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்கள் மற்றும் அசோக்கின் குடும்பத்தாரும் கலந்து கொண்டனர்.
கரையிருப்பில் உள்ள அவரது நினைவிடத்தை பேரணி வந்தடைந்தது. அங்கு அசோக் நினைவிடத்தில் தலைவர்கள் மற்றும் தோழர்கள் அஞ்சலி செலுத்தினர்.