இராமநாதபுரம், செப்.1 இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் காலனி யைச் சேர்ந்தவர் கருப்பசாமி.இவர் மினரல் வாட்டர் ஆட்டோவில் பணி புரிந்து வந்தார். இந் நிலையில் கமுதியில் உள்ள தனியார் திருமண மகாலுக்கு மினரல் வாட்டர் மோட்டார் மூலம் சப்ளை செய்யும் போது மின்சா ரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தார். கருப்பசாமி இறப்புக்கு மினரல் வாட்டர் வண்டியின் உரிமையாளரும் தனியார் திருமண மஹால் உரிமையா ளரும் நஷ்டஈடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து அவர்கள் இரு வரும் பேச்சுவார்த்தைக்கு வராததால் கமுதி அரசு மருத்துவமனை அருகே உள்ள எட்டுக்கண் பாலம் அருகில் கமுதி மதுரை சாலையில் கருப்பசாமி யின் உறவினர்கள் மறியல் செய்தனர். இதனை அடுத்து அங்கு வந்த கமுதி போலீசார் அவர்களை சமாதா னப்படுத்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து பேச்சு வார்த்தை நடத்தி தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து கருப்பசாமியின் உடலை பெற்றுக் கொண்டு உறவினர்கள் சென்றனர்