போக்சோவில் இளைஞர் கைது
கும்பகோணம், மார்ச் 2 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கூகூர் கிராமம் கீழத் தெருவைச் சேர்ந்த சக்தி வேல் (24) என்ற வாலி பர், சிறுமி ஒருவர் பள்ளிக் குச் செல்லும்போது, அவரை பின் தொடர்ந்து சென்று காதலிக்க வற் புறுத்தியுள்ளார். இது குறித்து புகார் தெரிவித்த தின் அடிப்படையில், நாச்சியார்கோவில் காவல் துறை ஆய்வாளர் சுகுணா, சக்திவேலை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து வழக்குப் பதிந்து சிறையில் அடைத் தனர்.
குழந்தை உரிமைகள் கிளப் தொடக்க விழா
அரியலூர், மார்ச் 2 - அரியலூர் அரசு கலைக் கல்லூரி எம்.ஜி. ஆர் நூற்றாண்டு விழா அரங்கில் குழந்தை உரி மைகள் கிளப் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி யின் முதல்வர் டோமி னிக் அமல்ராஜ் தலைமை வகித்து, குழந்தைகள் நலம் குறித்து பேசினார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் எம்.தர்மசீலன், குழந்தை உரிமைகள் கிளப்பை தொடக்கி வைத்து பேசு கையில், “குழந்தைகளுக் கான உரிமை என்பது சமூக, பொருளாதார, கலாச்சார, குடிமை உரி மைகளை உள்ளடக்கிய தாகும். இந்த கிளப் குழந்தை யின் நலன்களுக்காக செயல்படும். 6 முதல் 14 வயது வரை உள்ள அனைத்து குழந்தை களுக்கும் இலவச மற் றும் கட்டாய ஆரம்பக் கல்வி கற்பிக்கப்படும். அனைத்து வகையான உடல் அல்லது மன வன் முறைகளிலிருந்து குழந் தைகள் பாதுகாக்கப்படும். ஒரு குழந்தைக்கு தனித் தனியாக சட்டப்பூர்வ பிரதிநிதித்துவத்தை வழங்குவதைக் கட்டா யப்படுத்துகிறது” என் றார். மேலும் குழந்தை களுக்கான சட்ட பாது காப்புகள் குறித்தும் விளக் கினார். முன்னதாக அக்கல் லூரியின் இணைப் பேரா சிரியரும், குழந்தைகள் நல ஆலோசகருமான கி. பழனிசாமி வரவேற்றார். மாணவி ஜி.இளமதி நன்றி தெரிவித்தார்.
வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி
தஞ்சாவூர், மார்ச் 2- தமிழ்நாடு நெடுஞ் சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கம், தஞ்சாவூர் உட்கோட்டம் சார்பில், “வாக்கு செலுத் தும் ஜனநாயக கட மையை நிறைவேற்று வோம்” என்ற விழிப்பு ணர்வு உறுதிமொழி இயக் கம் வெள்ளிக்கிழமை அன்று தஞ்சாவூர் கோட்ட பொறியாளர் அலு வலகம் முன்பு நடை பெற்றது. மாவட்டத் தலைவர் டி.ஜனார்த்தனன் தலைமை வகித்தார். பி. சந்திரசேனன் விழிப்பு ணர்வு இயக்கத்தின் நோக்கம் குறித்து விளக் கிப் பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநி லச் செயலாளர் எஸ்.கோதண்டபாணி, சாலைப் பணியாளர் சங்க மாநி லச் செயலாளர் கு.பழனி சாமி, சாலை ஆய்வாளர் சங்க மாவட்டச் செய லாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
உளுந்து கூடுதல் மகசூல் பெற டி.ஏ.பி. கரைசல் தெளிப்பது அவசியம்
தஞ்சாவூர், மார்ச் 2- கூடுதல் மகசூல் பெற உளுந்து பயிரில் டி.ஏ.பி. கரைசல் தெளிப்பது அவசியம் என தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) சாந்தி ஆலோசனை கூறி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள உளுந்து பயிரில் 25 சதவீதம் வரை கூடுதல் மகசூல் பெற 2 சதவீதம் டி.ஏ.பி. கரைசல் தெளிப்பது மிகவும் அவசியமாகும். ஒரு ஏக்கருக்கு தேவையான 4 கிலோ டி.ஏ.பி. உரத்தினை நன்கு தூள் செய்து 10 லிட்டர் தண்ணீரில் முதல் நாளே ஊறவைத்து நன்கு கலக்கி விட வேண்டும். மறுநாள் தெளிந்த கரைசலை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொண்டு அத்துடன் 190 லிட்டர் தண்ணீர் சேர்த்து மாலை வேளையில் கைத்தெளிப்பான் கொண்டு ஒரு ஏக்கர் பரப்பில் தெளிக்க வேண்டும். 35 ஆவது நாள் பூக்கும் தருணத்தில் ஒரு முறையும், 45 ஆவது நாள் காய் பிடிக்கும் தருணத்தில் ஒரு முறையும் கரைசல் தயாரித்து 2 முறை தெளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் மண்ணிலிருந்து நேரடியாக மணிச்சத்தை எடுத்துக் கொள்ள முடியாத பயிர்கள், டி.ஏ.பி. கரைசல் மூலமாக இலை வழியாக மணிச்சத்து அளிக்கும்போது பயிர்கள் உடனடியாக மணிச்சத்தை பெறும். மேலும் உருமாறி காய்களாக உருவாகி அதில் உள்ள விதைகள் எல்லாம் நல்ல திரட்சியான எடையுடன் கூடிய தரமான மணிகளாக கிடைக்கிறது. இதனால் வழக்கத்திற்கு மாறாக ஒரு ஏக்கரில் 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் மகசூல் கிடைக்கிறது. எனவே உளுந்து சாகுபடி செய்துள்ள விவசாயிகள் டி.ஏ.பி. கரைசல் தெளித்து பயன்பெற வேண்டும். மேலும் விவரங்கள் அறிய வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் வேளாண்மை அலுவலர்களை அணுகலாம்” என கூறப்பட்டுள்ளது.
கருக்கலைப்பு மாத்திரை விற்ற மருந்துக் கடையின் உரிமம் ரத்து
அரியலூர், மார்ச் 2- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள புதுக்குடி கரைமேடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்தாண்டு தா.பழூரில் உள்ள ஒரு மருத்துவர் மூலம் கருக் கலைப்பு செய்து உதிரப்போக்கு காரணமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தனர். இதன் எதிரொலியாக கடந்த 3.11.2023 இல் பல்வேறு மருந்து கடை களில் மருந்து கட்டுப்பாட்டுத் துறை திருச்சி மண்டலம், பெரம்பலூர் சரகம் மருந்து ஆய்வாளர் ஸ்ரீதேவி ஆய்வு மேற்கொண்டார். அப்போது கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தா.பழூர் ராசி மெடிக்கல் மருந்து கடையையும் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மருந்து கடையில் உரிய அனுமதி யின்றி கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கி விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்த அறிக் கையை மருந்து கட்டுப்பாட்டு துறையிடம் சமர்ப்பித்தார். அந்த அறிக்கையின் அடிப்படையில், திருச்சி மண்டலம் மருந்து கட்டுப்பாட்டு துறை உதவி இயக்குநர் ரவிச்சந்தி ரன், தா.பழூரில் உள்ள ராசி மெடிக்கல் மருந்து கடை தொ டர்ந்து இயங்குவதற்கு தடை விதித்தும், அந்த கடையின் மருந்து விற்பனை செய்யும் உரிமத்தை ரத்து செய்தும் நட வடிக்கை மேற்கொண்டார்.
அரசு கல்லூரியில் முத்தமிழ் சுற்றும் விழா
அறந்தாங்கி, மார்ச் 2- புதுக்கோட்டை மாவட் டம் ஆவுடையார்கோயில் அருகே இயங்கி வரும் அறந் தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் முத்தமிழ் சுற்றும் விழா நடை பெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் பேராசிரி யர் வீ.பாலமுருகன் தலை மையேற்று துவக்கி வைத்து பேசினார். தமிழ் துறை தலை வர் முனைவர் காளிதாஸ் வரவேற்றார். தமிழ்த்துறை மாணவர்களின் கவிதை, கட்டுரை வாசித்தல் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றன. தமிழ்த்துறை மூன்றாம் ஆண்டு மாணவர் நவீன்குமார் நன்றி கூறி னார்.
தோழர் வீ.மீனாட்சிசுந்தரம் துணைவியார் காசியம்மாள் மறைவு: தலைவர்கள் அஞ்சலி
நாகப்பட்டினம், மார்ச் 1 - நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் அருந்தவம்புலம் கிராமத்தில் வாழ்ந்த வீ.காசியம்மாள் காலமானார். அவருக்கு வயது 96. இவர், சிபிஎம் நாகை தாலுகா செயலாள ராக பணியாற்றிய தோழர் மீயண்ணா என அழைக்கப்பட்ட வீ.மீனாட்சிசுந்தரத்தின் துணைவியார் ஆவார். 1968 இல் கீழ வெண்மணி வர்க்கப் போராட்டங்களின் போது நிலப்பிரபுத்துவ கும்பல், தீ வைத்து எரித்து 44 கூலித் தொழிலாளர்களை சாம்பலாக்கினர். இந்த சம்பவத்திற்கு முன்பே பல கிராமங் களில் நடைபெற்ற கலவரங்களை சுட்டிக்காட்டி, “உழைப்பாளி மக்களுக்கு அச்சுறுத்தல் உள்ளது. அவர்களுக்கு அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும்” என அன்றைய தமிழக முதல்வர் அண்ணாவுக்கு 1968 டிசம்பர் 12 அன்று கடிதம் ஒன்றை எழுதினார். அது டிசம்பர் 15 அன்று தீக்கதிர் நாளித ழில் செய்தியாக வந்தது. நாகை தாலுகா முழு வதும் உழைப்பாளி வர்க்கத்தின் உரிமை குரலை முழங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி தலைவராக திகழ்ந்த, தோழர் மீனாட்சிசுந்தரம் அவர்களின் போ ராட்ட இயக்கப் பணியிலும் வாழ்க்கையிலும் இரண்டற கலந்த, மார்க்சிய உணர்வோடு சாதி மறுப்புத் திருமணம், விவசாய சங்க போராட்டம், மாதர் சங்க இயக்கம், கட்சி மாநாடு, தலைமறைவு வாழ்க்கை, சிறை தண்டனை காலங்களில் குடும்பத்தையும் குழந்தைகளையும் திறம்பட வழிநடத்திய இணையராக இருந்து வந்தார் தோழர் காசி யம்மாள். வி.எம்.எஸ் ஜீவானந்தம், வி.எம்.எஸ். ராமமூர்த்தி, இளைய மகன் வி.எம்.எஸ். ஜோதிபாஸ், கோவை மாவட்ட ஆவராம்பா ளையம் கட்சி இடைக்கமிட்டி உறுப்பினரான கோவை மாநகராட்சி கவுன்சிலர் கண்ணகி ஜோதிபாசு-வின் மாமியார் காலமான தகவ லறிந்து, நாகை மாவட்டச் செயலாளர் வீ.மாரி முத்து, கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி, மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன், மாதர் சங்க மாவட்டச் செயலா ளர் டி.லதா, தலைஞாயிறு ஒன்றியச் செயலா ளர் ஏ.ராஜா, திருத்துரைபூண்டி ஒன்றியச் செயலாளர் டி.வி.கார்ல் மார்க்ஸ், தமுஎகச திருவாரூர் மாவட்டச் செயலாளர் ஜீ.வெங்க டேசன் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
ரயில்வே காண்டிராக்டரிடம் ரூ.5 லட்சம் மோசடி
திருச்சிராப்பள்ளி, மார்ச் 3 - திருச்சி பாலக்கரை எடத்தெரு பகுதியைச் சேர்ந்த வர் அம்ப்ரோஸ் (61) ரயில்வே காண்ட்ராக்டரான இவர், ரயில்வே பணிமனைக்கு 146 வீல் சேர் செய்வ தற்கு டெண்டர் எடுத்தார். பின்னர் வீல் சேர் தயாரிப் பதற்காக ஆன்-லைனில் விளம்பரம் கொடுத்தார். இதை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர் அவரது செல்போனுக்கு அழைத்து, வாட்ஸ் அப் மூலமாக உங்களுக்கு தேவையான வீல் சேர்களை தன்னு டைய நிறுவனத்தில் செய்து தருவதாகவும் அதற்கு ரூ.5,05,889 லட்சம் ஆகும் எனவும் கொட்டேஷன் கொடுத்தார். இதை நம்பிய அம்ப்ரோஸ் உடனடி யாக அந்த நபர் கூறிய வங்கி கணக்குக்கு ரூ.5,05, 889 பணத்தை ஆர்டிஜிஎஸ் மூலமாக அனுப்பி வைத்தார். அதன்பின், அந்த மர்ம நபரின் இணைப்பு துண்டிக் கப்பட்டது. பலமுறை போன் செய்தும் பதில் கிடைக்கவில்லை. இதனால், தான் ஏமாற்றப்பட் டதை உணர்ந்த அம்ப்ரோஸ் உடனடியாக ஆன்-லைன் மூலமாக திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பங்கு வர்த்தகத்தில் லாபம் ஈட்டி தருவதாக ரூ.18 லட்சம் மோசடி
திருச்சிராப்பள்ளி, மார்ச் 2- திருச்சி திருவானைக்காவல் அழகப்பா தெரு பகுதியைச் சேர்ந்த ஒருவர் சென்னையில் ஐடி நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து பகுதிநேர வேலை என்ற ஒரு லிங்கை டவுன்லோட் செய்தார். அப்போது அதில் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால், அதிக லாபம் ஈட்டி தருவதாக தெரி விக்கப்பட்டிருந்தது. இதை நம்பிய பொறியாளர் மோசடி பேர்வழிகள் கூறிய 8 வங்கி கணக்கு களுக்கு பல்வேறு தவணைகளாக கடந்த 3 மாதத்தில் ரூ.18 லட்சத்து 45 ஆயிரம் பணத்தை அனுப்பி யுள்ளார். ஆனால், அந்த மர்ம நபர்கள், அவருக்கு லாபத் தொகையும் தரவில்லை. முதலீடு செய்த பணத்தையும் திரும்பத் தராமல் ஏமாற்றி விட்டனர். பின்னர், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பொறி யாளர், இதுகுறித்து ஆன்-லைன் மூலமாக திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ஆய்வாளர் கன்னிகா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
இந்திய மருத்துவ சங்கத்தில் திருடிய 3 பேர் கைது
தென்காசி, மார்ச் 2. தென்காசி மாவட்டம், ஆய்க்குடி பகுதியில் இந்திய மருத்துவ சங்கம் உள்ளது. இங்கு காவலாளி வெளியே சென்றிருந்த நேரத்தில் சில நபர்கள் உள்ளே புகுந்து கலையரங்கதில் இருந்த லேப்டாப் மற்றும் ஆம்ப்ளிபயர் ஆகியவற்றை திருடிச்சென்றதாக மேலாளர் புகார் அளித் தார்.இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் திருட்டில் ஈடுபட்ட சிந்தா மணியை சேர்ந்த சுரேஷ் (35), அகரக்கட்டு பகுதியைச் சேர்ந்த அந்தோணி நிக்ஸன் ஜெயபால்(34) மற்றும் லூர்து அந்தோணி ராஜ் (30) ஆகியோரை கைது செய்து நீதி மன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தார். மேலும் திருடிய பொருட்களை பறிமுதல் செய்தனர்.
தில்லி விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம்
தூத்துக்குடி, மார்ச் 2- விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தில்லியில் விவசாயி கள் போராட்டம் நடத்தி வரு கின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயி கள் மீது ஒன்றிய அரசு தாக்கு தல் நடத்தியதில் ஒரு விவ சாயி உயிரிழந்தார். நூற்றுக் கணக்கானோர் காயம் அடைந்தனர். இந்நிலையில் தூத்துக் குடியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் விவசாயி களின் கோரிக்கையை ஒன்றிய அரசு உடனே நிறை வேற்ற வேண்டும், விவசாயி கள் மீது ஒன்றிய அரசு தாக்குதல் நடத்தியதை கண் டித்தும் விவசாயிகளுக்கு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் வியாழனன்று வ உ சி கல்லூரியில் மாணவ, மாண விகள் வகுப்புகளை புறக் கணித்து போராட்டத் தில் ஈடுபட்டனர்.
புதிய வட்டமாக திருவோணம் உதயம்!
சென்னை,மார்ச் 2- தமிழ்நாடு சட்டப் பேரவையில் 2022 - 2023 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது வரு வாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர், “தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு, பட்டுக் கோட்டை ஆகிய வட்டங்களைச் சீரமைத்து புதிய திரு வோணம் வட்டம் உருவாக்கப்படும்” என்று அறிவித்தார். அதன்படி, காவாளப்பட்டி, சில்லத்தூர், திருநெல்லூர், வெங்கரை ஆகிய 4 குறு வட்டங்களையும், 45 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கி திருவோணத்தைத் தலை மையிடமாகக் கொண்டு புதிய திருவோணம் வட்டத்தை உருவாக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டுள்ளார். இதற்கான அரசாணையும் வெளியிடப் பட்டுள்ளது.
காரிலிருந்து ரூ.17 லட்சம் திருடிய 6 பேர் கைது
கும்பகோணம், மார்ச் 2- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அசூர் மற்றும் கொரநாட்டு கருப்பூர் பகுதியில் உள்ள சிட்டி யூனியன் வங்கியில் கடந்த பிப்.22 அன்று, ரூ.17 லட்சம் பணத்தை பாதிக்கப்பட்ட நபர் எடுத்து தனது காரில் வைத்துள்ளார். இதை நோட்டமிட்டு காரை பின் தொடர்ந்து பைக்கில் வந்த நபர்கள், காரில் இருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து கும்பகோணம் கிழக்கு காவல் நிலை யத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் க.சிவசெந்தில்குமார் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினர் தீவிர விசாரணை மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட அரும்பாவூர் செந்தில்குமார், கோட்டூர்புரம் சுக்காபி என்ற சுரேஷ், விடூர் அக்கினி குப்பம் சசிகுமார், வாலாஜாபாத் விஸ்வா, துவாக் குடி சாந்தகுமார், சென்னை கோட்டூர்புரம் செல்வகணபதி என்ற ராசுக்குட்டி ஆகிய 6 பேரையும் கைது செய்து அவர் களிடம் இருந்து ரூ.7,72,000 பணம், அவர்கள் பணத்தை திருட பயன்படுத்திய மூன்று பஜாஜ் பல்சர் இருசக்கர வாகனங்கள், 3 செல்போன்கள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். மேலும், சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொண்டு அவர்களை சிறையில் அடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆறு பேர் மீதும் வழிப்பறி கொள்ளை, கொலை, திருட்டு, அடிதடி என பல்வேறு வழக்கு கள் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த திருட்டு சம்பவத்தில் தொடர்புடையவர்களின் கூட்டாளிகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.