கும்பகோணம், அக்.29 - இளம் இயக்குநரான பள்ளி மாணவி அகஸ்திக்கு ஐக்கிய நாடுகளின் சர்வதேச அமைதி கவுன்சில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் புறவழிச் சாலையில் கார்த்தி வித்யாலயா பன்னாட்டு பள்ளி இயங்கி வருகிறது. இப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி பி.கே.அகஸ்தி, கதை எழுதி இயக்கியுள்ள படம் ‘குண்டான் சட்டி’. இப்படமானது 2டி அனிமேஷனில் இயக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி மாணவனின் குறும்புத்தனத்தையும், மாண வர்கள் ஆசிரியர்களிடத்து எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். பெற்றோ ரையும் பெரியவர்களையும் மதித்து நடக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நற்கருத் துகளை மாணவ-மாணவியர்களுக்கு எடுத் துரைக்கும் ஒரு சிறந்த படமாக இது அமைந்துள்ளது. இந்தப் படம், மாணவர் களுக்கு நற்கருத்தை போதிக்கும் வகை யில் உள்ளதால், இளம் இயக்குநரான மாணவி அகஸ்தி பல்வேறு விருது களைப் பெற்றுள்ளார். சிறுவயதில் ஒரு சிறந்த கதையை எழுதி, இயக்கி, வெளியிட்ட இளம் இயக்கு நர் அகஸ்தியை கௌரவிக்கும் விதமாக, ‘சிறந்த சமூக சோசியல் மீடியா’, ‘சிறந்த சமூக சேவகர்’ என்ற விருதையும் கௌரவ டாக்டர் பட்டத்தையும் ஐக்கிய நாடுகளின் சர்வதேச அமைதி கவுன்சில் வழங்கி யுள்ளது. சிறு வயதிலேயே இவ்விருதை பெற்ற மாணவி அகஸ்தியை விழா குழுவி னர் பாராட்டினர். இந்த விழாவில், 30-க்கும் மேற்பட் டோர் சமூக சேவைக்காக பல்வேறு பிரிவு களில் விருதினை பெற்றனர்.