districts

ஆட்டிச குழந்தைகளின் பெற்றோர்க்கு பயிலரங்கு

பாபநாசம், ஏப்.17-

        தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நலப் பிரிவு, மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு சேவைகள் மையம், இந்திய குழந்தைகள் நல மருத்துவர்கள் நல சங்கம் சார்பில் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கான பயிற்சி பயிலரங்கு தஞ்சாவூர் இராசா மிராசுதர் மருத்துவமனை, கண் மருத்துவமனை விரிவுரை அரங்கில் நடைபெற்றது.

        பயிலரங்கில், இங்கிலாந்து குழந்தைகள் நல மூளை  நரம்பு மற்றும் மனநல வளர்ச்சி நிபுணர் மருத்துவர் கனக சபை புவனேந்திரன் கலந்து கொண்டு ஆட்டிசம் குழந்தை களை எப்படி கண்டு பிடிப்பது? அவர்களுக்கு தர வேண்டிய பயிற்சிகளை பற்றி விளக்கிக் கூறினார்.

        பயிலரங்கை தஞ்சை மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.பாலாஜி நாதன் துவக்கி வைத்தார். குழந்தைகள் நலப்  பிரிவு துறைத் தலைவர் மரு.செல்வக்குமார் வரவேற்றார்.  கல்லூரி மருத்துவக் கண்காணிப்பாளர் மரு.ராமசாமி, துணை கண்காணிப்பாளர் மரு.ரவி, நிலைய மருத்துவ  அலுவலர் மரு.செல்வம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.