districts

img

எருக்கூர் வள்ளுவர் தெருவுக்கு செல்ல சாலை வசதி அமைத்துத் தரப்படுமா?

சீர்காழி, டிச.31 - மயிலாடுதுறை மாவட்டம்  கொள்ளிடம் அருகே எருக் கூர் கிராமத்தில் வள்ளுவர் தெருவுக்கு மெயின் சாலையி லிருந்து 300 மீட்டர் தூரத்துக்கு  வாய்க்கால் கன்னியை ஒட்டி யுள்ள வரப்பில் சென்று கொண்டிருக்கின்றனர். இங்கு உள்ள வள்ளுவர் தெருவில் 20-க்கும் மேற்பட்ட  குடும்பங்கள் வசித்து வரு கின்றன.  இந்தத் தெருவுக்கு செல்வதற்கு வயல்  வழியே வரப்பை கடந்துதான் செல்ல வேண் டும். அங்கு சென்று வருவதற்கு வேறு வழி இல்லை. இதனால் மழைக்காலங்களில் அப்பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும்  விவசாயிகள் பெரிதும் அவதி அடைகின்ற னர். மழைக்காலத்தில் அப்பகுதியில் தண்ணீர் அதிக அளவு தேங்கி நிற்பதால் இடுப்ப ளவு தண்ணீரில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.  இதுகுறித்து சாலை அமைக்க கோரி அப்பகுதி மக்கள் சார்பில் பலமுறை சம்பந்தப் பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோடை காலங்களில்கூட வள்ளுவர் தெருவுக்கு சென்று வருவது மிக வும் சிரமமாக உள்ளது. எனவே காலங்கால மாக சாலை வசதி இல்லாமல் இருந்த  நிலையை மாற்றி போர்க்கால அடிப்படையில்  வள்ளுவர் தெருவுக்கு சாலை அமைத்துத் தர  வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.