திருத்துறைப்பூண்டி, அக்.22 - திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி அருகே விளக்குடி வருவாய் கிரா மத்தில் (சர்வே எண் 112,110/2,) அரசுக்குச் சொந்தமான சிவன் கோவில் குளம், அய்ய னார் பிரடேஸ்வரர் கோவில் குளங்கள் உள்ளன. இந்த குளத்தின் நீர்வழிப் பாதைகளில் நீர் உள்வரத்து, நீர் வெளியேறும் பாதைகள் ஆக்கிரமிப்பாளர்களால் முழுவதும் ஆக்கிர மிக்கப்பட்டுள்ளது. நெல் பயிர் சாகுபடி மற்றும் பருத்தி சாகுபடி என மூன்று போகம் சாகுபடியை காரணம் காட்டி ஆக்கி ரமிக்கப்பட்ட நிலையில், கடந்த 20.7.2024 அன்று திருத்துறைப்பூண்டி வருவாய் ஆய்வாளரிடம், “ஒரு மாதத்தில் ஆக்கி ரமிப்பை அகற்றி விடுகிறேன்” என ஆக்கிர மிக்கப்பட்ட நபர் எழுதிக் கொடுத்தார். ஆனால் இதுவரை ஆக்கிரமிப்புகள் எதுவும் அகற்றப்படவில்லை. நீர்நிலைகள் மற்றும் நீர்வழிப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், திருவாரூர் மாவட்ட ஆட்சி யர் இதில் தனி கவனம் செலுத்தி மாவட்ட நில அளவை செய்ய வேண்டும். மேலும், வாய்க்கால் கரை குளத்தின் நீர்வழிப் பாதை மற்றும் கிணறு ஆக்கிரமிப்பை அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.