தஞ்சாவூர், டிச.19 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஒன்றியம், செருவாவிடுதி தெற்கு ஊராட்சி கிருஷ்ணாபுரம் பகுதியில் பொது மயான சாலையை மேம்பாடு செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பேராவூரணி ஒன்றியம், செருவா விடுதி தெற்கு ஊராட்சியில், பொது மயா னம் மற்றும் ஆற்றங்கரை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை சீர மைக்கப்பட்டு பல ஆண்டுகளானதால் போக்குவரத்துக்கு பயனற்ற வகையில் உள்ளது. இதில் தினசரி ஆற்றங்கரை பகுதிக்கு பல்வேறு பணிகளுக்காக செல்லும் பொதுமக்களும், இறந்தவர்க ளின் சடலத்தை மயானத்துக்கு தூக்கி வருபவர்களும் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கின்றனர். இதுகுறித்து கடந்த ஆட்சியில் பல்வேறு மனுக்கள் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, ஒன்றிய நிர்வாகம் மயான சாலையை சீரமைத்து தர வேண்டும். மயா னத்திற்கு செல்லும் பாதையில் போக்கு வரத்துக்கு இடையூறாக குப்பைகள் கொட்டப் படுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிருஷ்ணாபுரம் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.