மயிலாடுதுறை, டிச.10 - மயிலாடுதுறை - தரங்கம்பாடி இடையே போக்குவரத்து சேவை யாற்றிய ரயிலை மீண்டும் இயக்கி காரைக்கால் வரை சேவையை நீட்டிக்க வேண்டுமென வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் டிசம்பர் 8 அன்று சைக்கிள் பிரச்சாரப் பேரணி துவங்கியது. இந்த மூன்று நாள் சைக்கிள் பிரச்சார பேரணி ஞாயிறன்று செம்ப னார்கோவில், தரங்கம்பாடி பகுதி களுக்கு வந்தடைந்தது. செம்பனார் கோவில் மேலமுக்கூட்டில் நடை பெற்ற துவக்க நிகழ்ச்சிக்கு செம்ப னார்கோவில் ஒன்றியச் செயலாளர் சபீர் அஹமது தலைமை வகித்தார். பிரச்சார பயணத்தை துவக்கி வைத்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ், ஆக்கூர் ஊராட்சி தலைவர் ஏ.ஆர்.சந்திரமோகன் உரையாற்றினர். மார்க்சிஸ்ட் கட்சி யின் செம்பை ஒன்றியச் செயலாளர் கே.பி.மார்க்ஸ் தலைமையில் பயணக் குழு தலைவர்களுக்கு பண மாலை, துண்டு அணிவித்தும் பட்டாசு வெடித்தும் வாழ்த்தினர். தரங்கம்பாடி ஒன்றிய எல்லை பகுதியான மேமாத்தூர் கேணிக்கரை யில் ஒன்றியச் செயலாளர் ஏ.ரவிச் சந்திரன் தலைமையில் பறையி சைத்து, பட்டாசு வெடித்து வரவேற் பளித்தனர். கடலி பகுதிக்கு வந்த டைந்த பயணக் குழுவை சந்தித்த பூம் புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பி னர் நிவேதா எம்.முருகன் கோரிக்கை வெற்றியடைய வாழ்த்தி வழியனுப் பினார்.
அவருடன் திமுக செம்பை தெற்கு ஒன்றியச் செயலாளர் அப்துல் மாலிக் உடனிருந்தார். திருவிளையாட்டத்தில் மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி. வெண்ணிலா, பி.எஸ்.கோஷ்மின், அரும்பாக்கத்தில் விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் சந்திரமோகன், ஆர்.ரஞ்சித், சங்கரன்பந்தலில் சிறு பான்மை நலக்குழு மாவட்டப் பொரு ளாளர் ஆசிக் ரஹ்மான், எஸ்.ராமச் சந்திரன், ஆயப்பாடியில் விவசாயி கள் சங்க மாவட்டத் தலைவர் டி. சிம்சன் ஆகியோர் உரையாற்றினர். காட்டுச்சேரியில் வாலிபர் சங்க முன்னாள் வட்டச் செயலாளர் கே. குணசேகர், ஜி.கார்த்திக்கேசன், தில்லையாடியில் மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் அமுல் காஸ்ட்ரோ, ஒன்றியக் குழு உறுப்பி னர் இளம்வழுதி, காழியப்பநல்லூ ரில் விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் காபிரியேல், டி.மணல்மேட்டில் வாலிபர் சங்க முன்னாள் மாநில துணைத் தலை வரும், விவசாய சங்க மாநிலக்குழு உறுப்பினருமான குணசுந்தரி, ஒன்றியக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், பொறையாரில் செய்தியாளர் ஜான்சன், ஒன்றியக்குழு உறுப்பி னர் என்.செல்வக்குமார் ஆகியோர் உரையாற்றினர். இடையிடையே பெய்த மழை யையும் பொருட்படுத்தாமல் போக்கு வரத்துக்கு எந்தவித இடையூறு மின்றி வாலிபர் சங்கத்தினர் சைக்கிள் பிரச்சாரப் பயணத்தில் ஈடுபட்டனர்.