districts

img

திருமண விழா

எழுத்தாளரும் கவிஞருமாகிய இரா.எட்வின் - விக்டோரியா, கோவை ஆ.சூரஜ்-சூ.கல்பனா ஆகியோரது இல்ல திருமண விழா புதன்கிழமை பெரம்பலூர் நான்கு ரோடு அருகிலுள்ள பூமணம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ், கவிஞர் இரா.எட்வின், சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மே 17 இயக்க தலைவர் திருமுருகன்காந்தி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் தலைவர் சாமுவேல்ராஜ், வாலிபர் சங்க மாநில நிர்வாகி ரெஜிஸ்குமார், பெரம்பலூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன், கவிஞர் நந்தலாலா, அறிவியல் இயக்க நிர்வாகி சோ.மோகனா, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.செல்லதுரை, சிபிஎம் திருச்சி மாவட்டச் செயலாளர் மா.ஜெயசீலன் மற்றும் எழுத்தாளர்கள் மணமக்கள் கிஷோர் - ஷீனா-வை வாழ்த்தினர். இறுதியில் கட்சி வளர்ச்சி நிதியாக 20 ஆயிரம் ரூபாயை கவிஞர் இரா.எட்வின் சார்பில், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் வழங்கப்பட்டது.

;