districts

img

சிபிஎம் சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளராக வி.ஆர்.கே.செந்தில்குமார் தேர்வு

தஞ்சாவூர், அக்.15-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் சேதுபாவா சத்திரம் ஐந்தாவது ஒன்றிய மாநாடு, பேராவூரணி மினி பாலா மண்டபம், தோழர்  சீத்தாராம் யெச்சூரி நினை வரங்கில் செவ்வாயன்று நடைபெற்றது. மாநாட்டுக்கு வி.ஆர். கே.  செந்தில்குமார், கர்த்தர், மேனகா ஆகியோர் தலைமை வகித்தனர். மூத்த தோழர் வீ.கருப்பையா கட்சிக் கொடியேற்றினார். மாவட்டச் செயற்குழு உறுப் பினர் என்.சுரேஷ்குமார் துவக்க உரையாற்றினார். மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.வாசு வாழ்த்திப் பேசி னார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன் நிறைவுரையாற்றினார்.  11 பேர் கொண்ட ஒன்றி யக் குழு தேர்வு செய்யப் பட்டது. புதிய ஒன்றியச் செய லாளராக வி.ஆர்.கே. செந்தில்குமார் தேர்வு செய் யப்பட்டார். தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற் படையினர் தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும்.  விவசாய விளைபொரு ளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்திட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந் துரையை சட்டமாக்க வேண்டும். பேராவூரணி பகுதியில் விவசாயிகள் நலன் கருதி,  கொப்பரை கொள்முதல் நிலையம், அரசு எண்ணெய்  உற்பத்தி ஆலைகள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தி ஆலைகள் துவங்க வேண் டும். மாட்டு வண்டிக்கென தனியாக மணல் குவாரி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.