districts

img

தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பல்வேறு திட்டப் பணிகளை எம்.சின்னதுரை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

புதுக்கோட்டை, செப்.23 - சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பல்வேறு திட்டப் பணிகளை கந்தர்வகோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பி னர் எம்.சின்னதுரை சனிக்கிழமை தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை  ஊராட்சி ஒன்றியம் வளவம்பட்டி ஊராட்சியில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிறுத்தம்,  கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட் பட்ட அரவம்பட்டி ஊராட்சியில் ரூ.13 லட்சம் மதிப் பீட்டில் அங்கன்வாடி மையக் கட்டிடம், கந்தர்வ கோட்டை பேருந்து நிலையம் முன்பாக ரூ. 10  லட்சம் மதிப்பீட்டில் நிழற்குடை, கந்தர்வ கோட்டை அரசு போக்குவரத்துப் பணிமனையில் ரூ. 5.55 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தரைத் தளம் அமைக்கும் பணிகளுக்கு சட்டமன்ற உறுப் பினர் எம்.சின்னதுரை சனிக்கிழமை அடிக்கல் நாட்டினார். மேலும், கந்தர்வகோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம் கட்டடம் கட்டுவதற்கு  தேர்வு செய்யப்பட்ட இடத்தையும் ஆய்வு செய்தார். மேற்படி நிகழ்வுகளில் சட்டமன்ற உறுப்பி னர் எம்.சின்னதுரையுடன், திமுக வடக்கு மாவட் டச் செயலாளர் கே.கே.செல்லப்பாண்டியன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துக்கழக மண்டல மேலாளர் ஆர்.இளங்கோவன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.