மதுக்கூர் ஒன்றியச் செயலாளராக வை.சிதம்பரம் தேர்வு
தஞ்சாவூர், அக்.25 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் ஒன்றிய 14 ஆவது மாநாடு, வியா ழக்கிழமை பூங்கொடி திரு மண மண்டபத்தில் நடை பெற்றது. ஒன்றியக்குழு உறுப்பி னர் எல்.சின்னப்பொண்ணு கொடியேற்றினார். எம்.அய்யநாதன் வரவேற்றார். மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.சி.பழனிவேலு துவக்க வுரையாற்றினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.செல்வம், மூத்த தோழர் ஆர்.காசிநாதன் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.கலைச் செல்வி நிறைவுரையாற்றி னார். மாநாட்டில் 11 பேர் கொண்ட புதிய ஒன்றியக் குழுவும், வை.சிதம்பரம் ஒன்றியச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். மதுக்கூரில் சேதம டைந்த பயணியர் விடுதிக்கு பதிலாக புதிதாக கட்டித் தர வேண்டும். வாடகைக் கட்டடத்தில் இயங்கி வரும் கிளை நூலகத்திற்கு சொந்தக் கட்டடம் கட்டித் தர வேண்டும். நூறுநாள் வேலையை பிரிக்காமல் அனைத்துப் பகுதி மக்க ளுக்கும் தொடர்ந்து வழங்க வேண்டும். உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.
அன்னவாசல் ஒன்றியச் செயலாளராக டி.ரகுபதி தேர்வு
புதுக்கோட்டை, அக்.25 - மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் புதுக் கோட்டை மாவட்டம் அன்ன வாசல் ஒன்றியச் செயலாள ராக டி.ரகுபதி தேர்வு செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அன்னவாசல் ஒன்றிய மாநாடு அன்னவா சலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு எஸ்.ரகுபதி, நாகராஜ், பானு மதி ஆகியோர் தலைமை வகித்தனர். மாநாட்டுக் கொடியை ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.சி.ரெங்க சாமி ஏற்றினார். ஒன்றியக் குழு உறுப்பினர் ஏ.தேவ ராஜன் வரவேற்றார். மாநாட்டை தொடங்கி வைத்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சண்முகம் உரையாற்றினார். வேலை அறிக்கையை ஒன்றியச் செயலாளர் எம்.ஆர்.சுப்பையா முன்வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.நாகராஜன் வாழ்த்துரை வழங்கினார். மாநாட்டில் 13 பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்வு செய்யப்பட்டது. ஒன்றியச் செயலாளராக டி. ரகுபதி தேர்வு செய்யப் பட்டார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சங்கர் நிறைவுரையாற்றினார். அன்னவாசல் கிளைச் செய லாளர் பி.ஜெயபால் நன்றி கூறினார்.
விராலிமலை ஒன்றியச் செயலாளராக என்.மகாலிங்கம் தேர்வு
புதுக்கோட்டை அக்.25- விராலிமலை ஒன்றியச் செயலாளராக என்.மகா லிங்கம் தேர்ந்தெடுக்கப்பட் டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விராலிமலை ஒன்றிய 24 ஆவது மாநாடு விராலிமலையில் வியாழக் கிழமை நடைபெற்றது. தோழர்கள் ஏ.இருதயம், பி.லெட்சுமி ஆகியோர் தலைமை வகித்தனர். மாநாட்டுக் கொடியை வி. முத்துக்குமார் ஏற்றி வைத் தார். அஞ்சலி தீர்மானத்தை ஒன்றியக்குழு உறுப்பினர் ஏ.இருதயம் வாசித்தார். ஒன்றியக்குழு உறுப்பினர் கே.எம்.சங்கர் வரவேற்றார். மாநாட்டை தொடங்கி வைத்து மாவட்ட செயற் குழு உறுப்பினர் எஸ்.சங்கர் உரையாற்றினார். வேலை அறிக்கையை ஒன்றி யச் செயலாளர் என்.மகா லிங்கம் முன்வைத்தார். மாநாட்டை வாழ்த்தி மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். ஜனார்த்தனன் பேசினார். மாநாட்டில் மூத்த தோ ழர்கள் கவுரவிக்கப்பட்டனர். மாநாட்டில் 9 பேர்கொண்ட ஒன்றியக்குழு தேர்வு செய் யப்பட்டது. ஒன்றியச் செயலாள ராக என்.மகாலிங்கம் தேர்வு செய்யப்பட்டார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சண்முகம் நிறைவுரையாற்றினார். முடிவில் பா.ஹரிபாலச் சந்தர் நன்றி கூறினார்.
கந்தர்வகோட்டை தெற்கு ஒன்றியச் செயலாளராக எஸ்.நாராயணசாமி தேர்வு
புதுக்கோட்டை, அக்.25- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கந்தர்வகோட்டை தெற்கு ஒன்றிய மாநாடு கு.நாயகர்பட்டியில் வியா ழக்கிழமை நடைபெற்றது. தெற்கு ஒன்றியச் செயலா ளராக எஸ்.நாராயணசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தோழர் சீத்தாராம் யெச்சூரி நினைவரங்கில் நடைபெற்ற மாநாட்டிற்கு ஏ.குமார், எஸ்.கமலஹாசன், கே.லதா ஆகியோர் தலைமை வகித்தனர். மாநாட்டுக் கொடியை எஸ்.சைவராஜ் ஏற்றிவைத்தார். ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.நாராயணசாமி அஞ்சலித் தீர்மானம் வாசித் தார். ஒன்றியக்குழு உறுப்பி னர் கே.புண்ணிய மூர்த்தி வரவேற்றார். மாநாட்டை தொடங்கி வைத்து மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் உரையாற்றி னார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏ.ராமையன் வாழ்த்திப் பேசினார். மாநாட்டில் 13 பேர் கொண்ட ஒன்றியக்குழு தேர்வு செய்யப்பட்டது. புதிய ஒன்றியச் செயலாள ராக எஸ்.நாராயணசாமி தேர்வு செய்யப்பட்டார். புதிய ஒன்றியக்குழுவை அறி முகம் செய்து கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரு மான எம். சின்னதுரை நிறை வுரையாற்றினார் முடிவில் பி. மதியழகன் நன்றி கூறினார்.