தஞ்சாவூர், மார்ச் 8- நூறு நாள் வேலைத் திட்ட தொழிலாளர்களுக்கு சம்ப ளம் வழங்காத மோடி அர சைக் கண்டித்து, தஞ்சாவூர் மாவட்டம், ஆவணத்தில், பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் ஏ.வி.குமாரசாமி தலைமை வகித்தார். வி.தொ.ச மாநிலத் தலைவர் வீ.அமிர்த லிங்கம், மாவட்டச் செயலா ளர் ஆர்.வாசு, சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பினர்கள், வி.தொ.ச ஆர்.மாணிக்கம், உ.பழனியப்பன் மற்றும் நூறுநாள் வேலைத் திட்ட பெண் தொழிலாளர்கள் 150 பேர் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண் டனர். ஆர்ப்பாட்டத்தில், நூறு நாள் வேலை திட்டத்தில் நிலு வையில் உள்ள சம்பள பாக்கியை வழங்க வேண்டும். அறிவித்த வேலை நாட்க ளையும், கூலியையும் குறைக்காமல் வழங்க வேண்டும். ஒன்றிய மோடி அரசு நூறு நாள் வேலைத் திட்டத்தை சீர்குலைக்கும் வகையில் நிதி ஒதுக்கீட்டை குறைத்ததை கண்டித்தும், குளங்கள் வெட்டுவது, வாய்க்கால் தூர்வாருவது போன்ற பணிகளை நிறுத்துவதை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட் டன. தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலரை சந் தித்து மனு அளிக்கப்பட்டது.