districts

img

இரு சக்கரவாகனம் மீது லாரி மோதி இரண்டு குழந்தைகள் பலி

தேனி, ஆக.24-

         தேனி மாவட்டம் உத்தம பாளையம் அருகே உள்ள  கோகிலாபுரத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது  மனைவி சரவணப்பிரியா. இந்த  தம்பதிக்கு சங்கிலிவேல் (12) என்ற மகனும், மேகாஸ்ரீ (8)  என்ற மகளும் இருந்தனர். கார்த்திகேயன் ஏற்கனவே  இறந்துவிட்டார். சரவணப்பிரியா தனியார் பள்ளி யொன்றில் பனியாற்றி வருகிறார்

      சங்கிலிவேலும், மேகாஸ்ரீயும் தேனியை அடுத்த பழனி செட்டிபட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து  வந்தனர்.  இந்த நிலையில் அவருடைய உறவினரான மதுரையைச் சேர்ந்த இளங்கோவன் மகன் சண்முக வேல் (21) என்பவருடன் மேகாஸ்ரீ, சங்கிலிவேல் ஆகி யோர் இருசக்கர வாகனத்தில் தேனிக்கு வந்தனர்.

     இரு சக்கர வாகனத்தை சண்முகவேல் ஓட்டி வந்தார்.   தேனி நேரு சிலை சிக்னல் பகுதியில் வந்த போது  பின்னால் வந்த லாரி இரு சக்கர வாகனம் மீது மோதியது.  இதில் சண்முகவேல் தூக்கி வீசப்பட்டார். மேகாஸ்ரீ, சங்கி லிவேல் ஆகிய இருவரும் லாரியின் சக்கரத்தில் சிக்கி னர். சக்கரம் அவர்கள் மீது ஏறி இறங்கியது. இந்த விபத்தில் மேகாஸ்ரீ சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரி ழந்தார்.  

    படுகாயம் அடைந்த சங்கிலிவேல், சண்முகவேல் இருவரும் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். செல்லும் வழியிலேயே சங்கிலிவேல் இறந்தார். சண்முகவேலுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

     இந்த விபத்து தொடர்பாக லாரி ஓட்டுநர் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியார் அருகே  ராஜமுடியை சேர்ந்த ராமர் (35) மீது தேனி காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.