districts

திருச்சி விரைவு செய்திகள்

கோடை விடுமுறையில்  பயிற்சியை தவிர்க்க கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, ஜுன் 1- தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி திருச்சி மாவட்ட செயலாளர் ஆரோக்கியராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, கோடை விடு முறை நாட்களில் பழிவாங்கும் நோக்கத்தில் கல்வித் துறை அதிகாரிகளால் திட்டமிடப்பட்டு பயிற்சிகள் அறி விக்கப்பட்டு மன உளைச்சலை ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் ஆசிரியர்கள் கடுமையான மனவேதனை அடைந்து வருகின்றனர். எனவே ஆசிரியர்களின் மன நிலையை கருத்தில் கொண்டு கோடை விடுமுறை நாட்களில் பயிற்சி வழங்குவதை தவிர்க்க வேண்டும் என  தெரிவித்துள்ளார்.


பள்ளி மாணவி தற்கொலை

 தஞ்சாவூர், ஜூன் 1 - தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர்  சூரியபாண்டி. தேநீர் கடை நடத்தி வருகிறார். இவரது மகள் யோகேஸ்வரி (15) அங்குள்ள தனியார் பெண்கள் பள்ளி யில் படித்து வந்தார். திங்கள்கிழமை மாணவி யோகேஸ் வரி சமூக அறிவியல் பாடத் தேர்வை எழுதி விட்டு, வீடு  வந்துள்ளார். அப்போது தேர்வை சரியாக எழுதவில்லை  என தாயார் செல்லம்மாவிடம் சொல்லி வேதனைப்பட்டு உள்ளார். அவரது தாயார் மாணவியை சமாதானப்படுத்தி உள்ளார். மன உளைச்சலில் இருந்த மாணவி தேர்வில் தோற்று விடுவோம் எனக் கருதி, இரவு 8 மணிக்கு யாரும்  இல்லாத நேரத்தில், வீட்டின் அறையில் உள்ள மின்விசிறி யில், சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தாகக் கூறப்படுகிறது.  தகவலறிந்த பட்டுக்கோட்டை காவல் துணைக் கண்கா ணிப்பாளர் செங்கமலக்கண்ணன், காவல் உதவி ஆய்வா ளர் முத்துக்குமார் சம்பவ இடத்திற்கு சென்று உடலைக்  கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து  பட்டுக்கோட்டை நகரக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 


ஆதனூரில் அன்னை மரியாள் தேர்பவனி

தஞ்சாவூர், ஜூன் 1- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுகா ஆதனூர்  பங்கு புனித அன்னாள் ஆலயத்தில், அன்னை மரியா ளின் திருத்தேர் பவனி நடைபெற்றது.  மே மாதம் முழுவதும் அன்னை மரியாளுக்கு ஒப்புக்  கொடுக்கப்பட்ட மாதமாக, கிறிஸ்தவர்களால் கொண்டாடப் பட்டு வருகிறது. அந்த வகையில், ஆதனூர் புனித அன்னாள் ஆலயத்தில், மே மாதம் முழுவதும் மாலை ஜெபம் நடைபெற்று, அதன் பின்பு சர்க்கரை வழங்கும் நிகழ்ச்சி பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. இதன்  நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை அன்னை மரியா ளுக்கு சிறப்பு செய்யும் வகையில் சிறப்பு சப்பரப் பவனி  ஆதனூரை சுற்றியுள்ள முக்கிய வீதிகள் வழியாக வலம்  வந்தது. சப்பரத்தை பங்கு தந்தை  லூர்துசாமி அடிகளார்  புனிதம் செய்து வைத்தார். 


வீடு வழங்கும் திட்டத்தில் 24 பேருக்கு பணி ஆணை  

அரியலூர், ஜூன் 1 - அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள வரத ராஜன் பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் பேரூர் மன்ற கூட்டம் செவ்வாயன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூர்  மன்ற தலைவர் மார்கரெட் தலைமை வகித்தார். வரத ராஜன் பேட்டை பேரூராட்சியில் நடைபெறக்கூடிய வளர்ச்சிப் பணிகள் மற்றும் பொதுமக்களுக்கு அத்தியா வசிய தேவையான குடிநீர் வசதி, சாலை வசதி, மின்சார  வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப் படுவது குறித்து பேரூர் மன்ற உறுப்பினர்கள் கோரிக் கையை முன்வைத்துப் பேசினர். 2021-2022 ஆம் ஆண்டு  அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 24 பயனாளி களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. வரதராஜன்பேட்டை பேரூர் மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.


ஜூன் 11 வேலைவாய்ப்பு முகாம்

 தஞ்சாவூர், ஜூன் 1-  தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக் கம் தஞ்சாவூர் ஆகியவை இணைந்து நடத்தும் தனி யார்துறை வேலை வாய்ப்புமுகாம் மே 11 (சனிக்கிழமை) அன்று தாராசுரம் கே.எஸ்.கே. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் காலை 8.30 மணிமுதல் பிற் பகல் 3 மணிவரை நடைபெறவுள்ளது.  வேலைவாய்ப்புடன் கூடிய இலவச திறன் மேம்பாட்டு  பயிற்சிக்கு ஆள்சேர்ப்பும் நடைபெறுகிறது. மேலும், வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வதற்கான பதிவு மற்றும்  ஆலோசனையும் வழங்கப்பட உள்ளது. தஞ்சாவூர்  மாவட்டத்தை சார்ந்த வேலை தேடும் இளைஞர்கள் தங்க ளின் சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் இதர சான்றிதழ் நகல்களுடன் கலந்து கொள்ளலாம். கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிப்போர் மற்றும் வேலைநாடுநர்கள் தங்களது சுய விவரங்களை www.tnprivatejobs.tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்ய இயலாதவர்கள் நேரடியாக முகாமில் கலந்து கொள்ள லாம். மேலும், விவரங்களுக்கு 04362-237037, 9442557037 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளும்படி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்  தெரிவித்துள்ளார்.


நாளை அரசு வாகனங்கள் பொது ஏலம்

தஞ்சாவூர், ஜூன் 1-  தஞ்சாவூர் மாவட்ட ஆட்சி யரின் கட்டுப்பாட்டில் இயங்கும், தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவல ரின் பயன்பாட்டில் இருந்த பதிவெண் டி.என்.49 ஜி-0445  என்ற அம்பாசிடர் வாகனம், பட்டுக்கோட்டை வருவாய்க் கோட்ட அலுவலக பதிவு எண் டி.என்.49 - ஜி-0498 பொலிரோ வாகனம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல  அலுவலக டி.என்.47- ஜி. 0063 ஆகிய வாகனங்கள், பொது ஏலம் மூலம் விற் பனை செய்ய உத்தேசிக்கப் பட்டுள்ளது.  இந்த வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புவோர், விலைப்புள்ளியுடன் ரூ.10, 000-க்கான வங்கி வரை வோலை மூலம் செலுத்தப் பட வேண்டும். மூடி முத்தி ரையிடப்பட்ட விலைப்புள்ளி கள் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் 3.6.2022 அன்று மாலை 3 மணி.  விருப்பம் உள்ள நபர்கள்  வாகனத்தை நேரில் பார்வை யிட்டு வாகனம் இருக்கும் இடத்தில் உள்ள நிலைக்கு விலைப்புள்ளி அளிக்கலாம். விலைப்புள்ளிகள் 3.6.2022 அன்று மாலை 4 மணிக்கு, வந்துள்ள ஏலதாரர்கள் முன்னிலையில் திறக்கப்ப டும்.  உறையின் மீது எந்த  வாகனத்திற்கான விலைப் புள்ளி என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும். ஏல  அறிவிப்பு நாள் மற்றும் நேரத் தினை மாற்றி அமைத்திட மாவட்ட ஆட்சியருக்கு முழு  அதிகாரம் உண்டு என ஆட்சி யர் தினேஷ் பொன்ராஜ் ஆலி வர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


போக்சோ சட்டத்தில் 15 வயது சிறுவன் கைது

புதுக்கோட்டை, ஜூன் 1 - புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது 15 வயது சிறுவன், சிறுமியை அழைத்துச் சென்று  பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.  சிறுமியின் உடலில் காயங்கள் ஏற்பட்டிருந்த நிலையில், வீட்டிற்கு வந்த பெற்றோர் சிறுமியை கந்தர்வகோட்டை அரசு  மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதனைத்  தொடர்ந்து சிறுமி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்ப டையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 15 வயது  சிறுவனை புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய  போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது  செய்து சிறையில் அடைத்தனர்.
மாதர் சங்கத்தினர் ஆறுதல்
தற்போது சிறுமி மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கும், அவரது பெற்றோ ருக்கும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச்  செயலாளர் டி.சலோமி உள்ளிட்டோர் ஆறுதல் தெரிவித்த தோடு, உரிய சிகிச்சை மேற்கொள்ளுமாறு மருத்துவர்களிட மும் வலியுறுத்தினர். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் மேலும் தொடராத வகையில் மாவட்ட நிர்வாகமும், காவல் துறையினரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலி யுறுத்தினர்.


மும்முனை மின்சாரம் தடையின்றி வழங்கப்படுமா? விவசாயிகள் சங்கம் போராட்டம்

பாபநாசம், ஜூன் 1 - உரத் தட்டுப்பாட்டை நீக்க வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் தட்டுப்பாடின்றி உரம்  கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தடையின்றி  மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். பழுதடைந்த மின்  கம்பங்களை மாற்ற வேண்டும். அரையபுரம், பெருமாங் குடி, பண்டாரவாடை, தேவராயன் பேட்டை வாய்க்கால்களைத்  தூர்வார வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்க பாபநாசம் ஒன்றியக் குழு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.  பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மே 18 அன்று  போராட்டம் நடைபெற்றதில், மே 24 ஆம் தேதி பேச்சு வார்த்தை நடத்துவதாக உறுதியளிக்கப்பட்டது. ஆனால் பேச்சுவார்த்தை நடக்கவில்லை. இதனால் புதன்கிழமை பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு ஒன்றியச் செயலா ளர் முரளிதரன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலா ளர் காதர் உசேன், சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.