districts

img

புதுக்கோட்டை அருங்காட்சியகத்தை விரிவுபடுத்தத் திட்டம்

புதுக்கோட்டை, செப்.22 - சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் புதுக் கோட்டை அருங்காட்சியகத்தை விரிவு படுத்தத் திட்டமிட்டுள்ளதாக தமிழ்நாடு சுற்றுலாத்துறை செயலாளர் கே.மணி வாசன் தெரிவித்துள்ளார்.  புதுக்கோட்டை அரசு அருங்காட்சி யகத்தை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தபின் அவர் கூறியதாவது: பல்வேறு புராதன சின்னங்களைக் கொண்டது புதுக்கோட்டை. மாநிலத் தின் இரண்டாவது அருங்காட்சியகமாக உள்ள புதுக்கோட்டை அருங்காட்சி யகத்தில் தற்போது சில பணிகள் நடை பெற்று வருகின்றன. தற்போது உள்ள இடத்தின், இடப் பற்றாக்குறையால் உலோகப் பொருட்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கூடுதல்  நிதி கேட்டு ஒன்றிய அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  இதற்கிடையே இந்த அருங்காட்சி யகத்தை விரிவுபடுத்த, வாகன நிறுத்தம் உள்ளிட்ட வசதிகளுடன் விசாலமான அருங்காட்சியகமாக அமைத்திட 5 ஏக்கர் அளவுக்கு நிலம் வேண்டும். இதனை மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டுள் ளோம். இதேபோல, முத்துக்குடா சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளும் நடை பெற்று வருகின்றன. உலகப் புகழ் பெற்ற சித்தன்னவாசலும் தேவைக் கேற்ப மேம்படுத்தப்படும்.  தமிழ்நாடு முழுவதும் 300 சுற்று லாத் தலங்களை மேம்படுத்த திட்டம்  தயாரிக்கப்பட்டுள்ளது. அவை அனைத் தும் படிப்படியாக நிறைவேற்றப்படும். கீழடியில் அமைக்கப்பட்டுள்ள அருங் காட்சியகம் மிகப்பெரும் வரவேற் பைப் பெற்றுள்ளது. அதேபோல தஞ்சை, நெல்லை மற்றும் கங்கை கொண்ட சோழபுரத்திலும் அருங்காட்சி யகங்கள் அமைக்கும் பணிகள் நடை பெற்று வருகின்றன. பொற்பனைக் கோட்டையிலும் அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து பொற்பனைக்கோட்டை அகழாய்வு தளத்தையும், முத்துக்குடா பகுதிகளையும் மணிவாசன் நேரில்  பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது  மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா  உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.