திருச்சிராப்பள்ளி, மே 10- தெற்கு ரயில்வேயில் ஒட்டு மொத்த செயல்திறனுக்கான விருதை திருச்சி ரயில்வே கோட்டம் பெற்றுள்ளது. இந்தியாவில் ரயில்வே போக்கு வரத்து கடந்த 1853 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி குஜராத் மாநிலம் போர் பந்தரிலிருந்து தானே வரை முதன் முதலாக இயக்கப்பட்டது. அதனை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோ றும் நாடு முழுவதும் ரயில்வே வாரம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் தெற்கு ரயில்வேயின் 67 ஆவது ரயில்வே வார விழா கடந்த மே 6 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பான செயல்பாடு மற்றும் சேவைகளை பாராட்டி பல்வேறு பிரிவு களிலும் சிறப்பிடம் பெற்றவர்களையும் பிரிவுகளையும் பாராட்டி தனிநபர், குழு, துறைசார் விருதுகளும் வழங்கப்பட்டன. சிறப்பு விருந்தினராக தெற்கு ரயில்வே பொது மேலாளர் பி.ஜி. மல்லையா கலந்து கொண்டு, சிறப்பிடம் பெற்றமைக்காக பல்வேறு பிரிவுகளுக் கும், தனிநபர் மற்றும் சிறந்த குழு மற்றும் கோட்டம், அலுவலர்கள், பணியா ளர்களுக்கென விருதுகளை வழங்கி னார். இதில், பொது மேலாளரின் பிரிவு களுக்கிடையேயான ஒட்டுமொத்த செயல்திறனுக்கான முதல் பரிசை தெற்கு ரயில்வேயில் திருச்சி கோட்டம் பெற்றுள்ளது. அதற்கான கேடயத்தை, தெற்கு ரயில்வே பொது மேலாளரிடமிருந்து திருச்சி கோட்ட மேலாளர் மணீஷ் அகர் வால் மற்றும் ரயில்வே அலுவலர்கள் பெற்றுக் கொண்டனர். இதில் பணியா ளர்கள், மருத்துவம் மற்றும் பாதுகாப்பு துறைகள் மூலம் சிறந்த செயல்திறனுக் கான விருது கிடைத்துள்ளது குறிப்பிடத் தக்கது.