புதுக்கோட்டை, ஜூலை 17-
சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வ தற்காக, சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பிப்பது குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சி யர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரிவித்துள்ளதாவது:
2023 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் “சமூக நீதிக் கான தந்தை பெரியார் விருது” வழங்குவதற்கு, உரிய விரு தாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படு கிறது. எனவே, சமூக நீதிக்காக பாடுபட்ட, தகுதிகள் உடை யவர்கள் தங்களது விண்ணப்பத்தினை, மாவட்ட ஆட்சி யருக்கு விண்ணப்பிக்கலாம்.
ரூ.5,00,000 (ரூபாய் ஐந்து லட்சம் மட்டும்) விருது தொகையும், ஒரு சவரன் தங்கப் பதக்கமும், தகுதியுரை யும் வழங்கப்படுகிறது. இவ்விருதாளர் முதலமைச்சரால் தேர்வு செய்யப்படுகிறார். விண்ணப்பம் தங்களின் சுயவிப ரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக் காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம், ஆவணங்களை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். 2023 ஆம் ஆண்டு தந்தை பெரியார் விருதிற்கான விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியருக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள்.15.9. 2023 ஆகும்.