districts

img

திருவாரூர்: சிஐடியு இணைப்பு சங்கங்கள் ரூ.1 லட்சம் தேர்தல் நிதி

திருவாரூர், ஏப்.8 - இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) திருவாரூர் மாவட்டக் குழுவின் சார்பாக நாடாளுமன்ற தேர்தல் விளக்கப் பேரவை திருத்துறைப்பூண்டியில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. பேரவைக்கு மாவட்டத் தலைவர் எம்.கே.என்.அனிபா தலைமை வகித்தார். பேர வையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். சிஐடியு வில் இணைக்கப்பட்ட சங்கங்களின் சார்பாக 3 ஆம் தவணையாக ரூபாய்  ஒரு லட்சம் நிதியை, சிஐடியு மாவட்டச்  செயலாளர் டி.முருகையன், அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ண னிடம் வழங்கினார்.  இதில் சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் டி.வீரபாண்டியன், கே.தமிழ்மணி மற்றும் சிஐடியு மாவட்ட நிர்வாகிகள், இணைக் கப்பட்ட சங்கத்தினர் கலந்து கொண்டனர்.