தூத்துக்குடி, ஜூன் 8
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டி யல் மூலம் ரூ. 3.10 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் செவ்வா யன்று காவடி பிறை மண்டபத்தில் கோவில்அறங்காவ லர் குழு தலைவர் அருள் முருகன் தலைமையில் இணை ஆணையர் கார்த்திக் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. சிவகாசி பதினெண் சித்தர் மடம் பீடம் குரு குலம் வேத பாடசாலை உழவா ரப்பணி குழுவினர் உண்டி யல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
அதில் நிரந்தர உண்டியல் மூலம் ரூ. 3 கோடியே 10 லட்சத்து 40 ஆயிரத்து 748-ம், உலோகங்கள் தங்கம் 2 கிலோ 800 கிராம், வெள்ளி 25 கிலோ, பித்தளை 33 கிலோ, செம்பு 6 கிலோ, தகரம் 2 கிலோ மற்றும் அயல் நோட்டு 292-ம் இருந்தது. உண்டியல் எண்ணும் பணியில் இந்து சமய அறநி லையத்துறை தூத்துக்குடி உதவி ஆணையர் சங்கர், திருச்செந்தூர் ஆய்வாளர் மற்றும் கோவில் பணி யாளர்கள் உடன் இருந்தனர்.