districts

img

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கருத்தரங்கம்

புதுக்கோட்டை, டிச.29 - அய்யன் திருவள்ளுவர் 133 அடி உயர உருவச்சிலை கன்னியாகுமரியில் நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு வெள்ளி  விழா கருத்தரங்கம் புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட மைய நூலக வாசகர் வட்டத்தின் சார்பாக நடைபெற்ற நிகழ்வுக்கு மாவட்ட நூலக அலுவலர் அ.பொ.சிவக்குமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில  துணைத் தலைவர் கவிஞர் நா. முத்துநிலவன் உரையாற்றி னார். “அன்பும் அறனும்” என்ற தலைப்பில் தமிழ்ச்செம்மல் கவிஞர்  தங்கம் மூர்த்தி சிறப்புரையாற்றினார்.  முதல்நிலை நூலகர் கி.சசிகலா வரவேற்க, கவிஞர் பீர்முகமது நன்றி கூறினார். முன்னதாக, பள்ளி மாணவர் களுக்கும், வாசகர்களுக்கும் திருக்குறள் ஒப்பித்தல் போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் வினாடி-வினா போட்டிகள் நடைபெற்றன. வாசகர் பேரவை செயலாளர் பேரா.விஸ்வநாதன், கவிஞர்கள் எஸ்.இளங்கோ, காசாவயல் கண்ணன், டெய்சிராணி உள்ளிட் டோர் பங்கேற்றனர்.