districts

img

திருத்துறைப்பூண்டி நகராட்சி தேர்தல் சிவந்த மண் சிங்களாந்தியும் வெற்றியை உறுதி செய்யும் செங்கொடியும்

திருத்துறைப்பூண்டி என்பது கிழக்குத் தமிழகத்தின் கடைக்கோடி நகரங் களில் ஒன்றாகும். குறைந்தபட்சம் 25 ஆயிரம் மக்கள் தொகையோடும் சுமார் 19ஆயிரம் வாக்காளர்களோடும் கூடிய அழகிய ஊராகும். மதச்சார்பற்ற கொள்கையில் மிகுந்த பிடிப்பும், வன்முறையற்ற ஜனநாயக அரசியலில் நம்பிக் கையும், இடதுசாரி சித்தாந்தத்தின் மீது மாறாத பற்றும் கொண்டு வாழக்கூடிய மக்கள்  நிரம்பிய ஊராகும். தொடர்ந்து திருத்துறைப் பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  சார்பில் சட்டமன்ற உறுப்பினர் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட தோழமைக்கட்சி யின் துணையோடு வெற்றி பெறுவது சிறந்த உதாரணமாகும். 

சிங்களாந்தியின் சிறப்பு
இந்த ஊர் பேரூராட்சி, தேர்வு நிலை பேரூராட்சி தற்போது நகராட்சி என வளர்ந்து  வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்  நேரடி வாக்கு செலுத்துதல் மூலமாக தலை வரை தேர்ந்தெடுக்கும் போதெல்லாம் அதற்கு உறுதுணையாக இருந்து தலைவர்களை தேர்ந்தெடுக்கும் தனித்துவம் பெற்ற ஊராக  தற்போது 24 ஆவது வார்டாக அறிவிக்கப்பட்டு உள்ள சிங்களாந்தி கிராமம் விளங்குகிறது. உதாரணமாக 1986ஆம் ஆண்டு நடைபெற்ற பேரூராட்சி தேர்தலில் அன்றைய திமுக நகர செயலாளர் இரா.செல்வராசன் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் எம்.பி.கண்ணுசாமி போன்ற வர்கள் வழிகாட்டி விறுவிறுப்பாக தேர்தல் நடை பெற்ற காலத்தில் சிங்களாந்தி கிராமத்தின் ஒட்டுமொத்த வாக்குகளும் இரா.செல்வராச னுக்கு வழங்கப்பட்டு அவர் தலைவரானது அழி யாத நினைவு ஆகும். அப்போது மறைந்த தலை வர் எம்.வேதையன் மன்ற உறுப்பினராக செயல் பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு திருத்துறைப்பூண்டி நகராட்சி யாக தரம் உயர்த்தப்பட்டு முதல் தேர்தல் நடை பெற்ற 1996 ஆம் ஆண்டு அன்றைய அரசியல் சூழல் காரணமாக சிபிஎம், மதிமுக கூட்டணி  அமைத்து மாநிலம் முழுவதும் போட்டியிட்டது.  அப்போது 8 நகராட்சியை மதிமுக கைபற்றி யிருந்தது. அதில் திருத்துறைப்பூண்டியும் ஒன்றாகும். அந்த தேர்தலில் பொது வாழ்வில் நுழைந்த முதல் தேர்தலிலேயே சமூக ஆர்வல ராக செயல்பட்டு வந்த இரா.மணிமாறன் என்ற  இளைஞர் மதிமுக சார்பில் நகர்மன்ற தேர்தலில்  நகர்மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டது இன்றளவும் பேசப்படும் வரலாறாக உள்ளது.

 அந்த தேர்தலில் சிபிஎம் சார்பில் மூன்று  நகர்மன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்ட னர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு மேலும் இரண்டு உறுப்பினர்கள் சிபிஎம்-மில்  இணைந்து அந்த எண்ணிக்கை 5 ஆக  உயர்ந்தது. இரா.மணிமாறன் வெற்றிபெற்ற அந்த தேர்தலில் சிங்களாந்தி வாக்குச்சாவடி யில் பதிவான வாக்குகளில் 80 சதவீத வாக்கு கள் (450க்கு மேல்) குடை சின்னத்திற்கு அளிக் கப்பட்டு வாக்கு எண்ணிக்கையின் போது  இரா.மணிமாறன் வெற்றியின் உச்சத்திற்கு காரணமாக அமைந்தது. இதுகுறித்து அன்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செய லாளராக இருந்த தற்போது நூற்றாண்டைக் கண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்ற தகைசால்  தலைவர் தோழர் என்.சங்கரய்யா வெளியிட்ட கட்சி கடிதத்தில் இந்த வெற்றி குறித்து குறிப் பிட்டு பாராட்டி எழுதியிருந்தது தேர்தல் பணி யாற்றிய கட்சியினரை உற்சாகப்படுத்தியது.

சிபிஎம் உறுப்பினர்கள்
இந்த வரலாற்றுப் பின்னணியில் தொடர்ச் சியாக இந்த பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள் உறுப்பினராக தேர்வு செய்யப்படுவதும் போற்றுதலுக்குரிய ஒன்றா கும். 1996 தேர்தலில் தோழர்.ஜி.முனியப்பன் நகர்மன்ற உறுப்பினராகவும், 2001 ஆம் ஆண்டில் மறைந்த தோழர் கட்சியின் மூத்த  தலைவர் எஸ்.இளங்கோ நகர்மன்ற உறுப்பின ராகவும், 2006 ஆம் ஆண்டு சிபிஎம் நகரக் குழு உறுப்பினர் தோழர்.கே.கோபுவின் துணை வியார் ஜி.ரேவதி நகர்மன்ற உறுப்பினராகவும் தொடர்ந்து பணியாற்றி வந்துள்ளனர். 2001 ஆம்  ஆண்டு தோழர் எம்.பி.கே.பாண்டியன் மற்றும்  2011 ஆம் ஆண்டு தோழர் ஜி.ரேவதி ஆகி யோர் நகர்மன்ற தலைவர் தேர்தலில் கட்சியின்  சார்பில் தனித்து போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்று வெற்றி வாய்ப்பை இழந்த  னர். அந்த தேர்தல்களிலும் சிங்களாந்தி கிராமம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அடையாளமாக கட்சியின் மரியாதையை உயர்த்தி பிடித்தது என்றால் அது மிகையல்ல. தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மீதும், செங்கொடியின் மீதும் மாறாத பற்றும்  பேரன்பும் கொண்டு வாழக்கூடிய இப்பகுதியின்  உழைக்கும் மக்கள் கட்சியின் அழியாத சொத்து ஆவர்.

 இந்த விடாப்பிடியான கொள்கை உறுதிக்கு  காரணம் நேர்மையோடும், உண்மையோடும் அர்ப்பணிப்போடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் முதல் கடைநிலை கட்சி உறுப்பினர் வரை பணியாற்றுவது தான்.  1980-களில் சரியான சாலைவசதி, குடிநீர்  வசதி, மருத்துவ வசதி போன்ற அடிப்படை வசதி கள் ஏதுமற்ற பின்தங்கிய பகுதியாக இருந்த சிங்களாந்தி கிராமம் குறிப்பிட தக்க அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது. சமூக பொருளாதார அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளது. அனைத்து பகுதி மக்களும் சாதி வேறுபாடு இல்லாமல் ஒருதாய் மக்களாக வாழ்வதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடைவிடாது வழிக்காட்டிக் கொண்டிருக்கிறது. எத்தகைய சூழ்நிலையிலும் கட்சி முடிவை கறாறாக அமல்ப டுத்துகிற விடாப்பிடியாக போராடி வெற்றிபெறு கிற போர்குணம்மிக்க மக்களாக இப்பகுதி உழைக்கும் மக்கள், இளைஞர்கள், இளம்  பெண்கள் விளங்கி வருகின்றனர். இங்கு புதிய தலைமுறை நவீன சூழலில் பட்டதாரிகளாக அரசு ஊழியர்களாக, தனியார் கம்பெனி  ஊழியர்களாக, வெளிநாட்டில் வேலைபார்ப்ப வர்களாக முன்னேறி இருக்கின்றனர். இதற்கு பின்னால் செங்கொடி இயக்கம் உள்ளது என்ற  பெருமிதம் இப்பகுதி மக்களுக்கு உண்டு.  ஜெயப்பிரகாஷ் வெற்றி உறுதி இத்தகைய வரலாற்று பின்னணியில் வரு கின்ற 19.02.2022 சனிக்கிழமையன்று நடை பெறுகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய தேசிய காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனி யன் முஸ்லீம் லீக், திராவிடர் கழகம் போன்ற  கட்சிகளின் ஆதரவோடு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் இளம் தோழர், கட்சியின் நகரக் குழு உறுப்பினர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நகர செயலாளர் எம்.ஜெயபிரகாஷ் நகர்மன்ற உறுப்பினர் பொறுப்பிற்கு வேட்பாள ராக போட்டியிருகிறார். 18 வய்தில் இருந்து கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தன்னை இணைத்துக்  கொண்டு மாசற்ற மக்கள் பணியில் ஈடுபட்டு  வருகிறார். இவரது வெற்றி உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவர்களும் ஊழி யர்களும் தொடர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

வார்டு 11-ல் செங்கொடி வெற்றி உறுதி
திருத்துறைப்பூண்டி நகராட்சி 11 ஆவது வார்டில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக ராமலோக ஈஸ்வரி போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து சுயேட்சை வேட்பாளர் ஒருவர் மட்டும் களத்தில் உள்ளார். இந்த வார்டில் வெற்றிமுகம் காட்டி  மக்களின் வரவேற்போடும் கூட்டணி கட்சிகளின்  ஆதரவோடும் வெற்றியை நோக்கி முன்னேறிக்  கொண்டிருக்கிறார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட  செயற்குழு உறுப்பினரும் நகர செயலாளரு மான கே.ஜி.ரகுராமனின் துணைவியார் ராம லோக ஈஸ்வரி (39) ஆவார். எம்.ஏ, பி.எட் பட்டதாரி யான இவர் சிபிஎம் கட்சி உறுப்பினர் ஆவார்.  நாடார் தெரு, காட்டுநாயக்கன்தெரு, அபி ஷேககட்டளை ஆதிதிராவிடர்தெரு இவற்றை  உள்ளடக்கிய இந்த வார்டில் 697 வாக்காளர் கள் உள்ளனர். ஓராண்டு காலம் குடிநீர் வசதி யில்லாமல் அவதிபட்டு கொண்டிருந்த 100 குடும் பங்கள் பயன்பெறும் வகையில் கொள்ளிடம் கூட்டுகுடிநீர் திட்டம் இப்பகுதி மக்களுக்கு கிடைத்து குடிநீர் வழங்கியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. கஜாபுயலின்போது பழுத டைந்த மின்கம்பங்களை எல்லாம் சரிசெய்து ஆற்றங்கரை தெருவில் மூன்று புதிய மின்கம் பங்களை அமைத்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

இதுபோன்று இப்பகுதி மக்களின் வாழ்வோடு அன்றாடம் கலந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பணியாற்றுவதாலும் திமுக  மற்றும் கூட்டணி கட்சிகளின் பலமான வாக்கா ளர்கள் உள்ளதாலும் ராமலோக ஈஸ்வரியின் வெற்றி எளிதாக உள்ளது. இப்பகுதியில் ஓடும்  வாய்க்காலை சீரமைப்பதோடு ஆற்றில் குளிப்ப தற்கு படித்துறை சீரமைத்து புதிய மின்கம்பங் களை அமைத்தல் சாலைகளை மேம்படுத்து தல் சுகாதார வளாகம் அமைத்தல் மக்கள் பயன்பாட்டிற்கு இரண்டு பாலங்கள் கட்டுதல் போன்ற வாக்குறுதிகளோடு மக்களை சந்தித்து  ஆதரவு திரட்டி வருகிறார் சிபிஎம் வேட்பாளர் ராமலோக ஈஸ்வரி. திமுக கூட்டணி கட்சியின ரும் மிகசிறப்பாக உற்சாகமாக பணியாற்றி வரு கின்றனர். 

பாரம்பரிய குடும்பம்
இவரது மாமனார் மறைந்த கே.கோபால் சாமி காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக் குழு உறுப்பினராக பணியாற்றியவர். இப்பகுதி யில் வாழும் 15 குடும்பங்களுக்கு மனைபட்டா (சிலிங்லேண்ட்) பெற்று தந்திருக்கிறார். கே.ஜி. ரகுராமனின் மூத்த சகோதரர் ஜி.பாஸ்கர் வட்டார  காங்கிரஸ் கமிட்டி தலைவராக உள்ளார். தேசிய அரசியலை முன்னேடுத்து பொதுவாழ்வில்  தொடர்ந்து பணியாற்றக்கூடிய பாரம்பரிய குடும் பத்தை சேர்ந்த மருமகளான ராமலோக ஈஸ்வரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாள ராக போட்டியிடுவது இப்பகுதி மக்களின் ஆத ரவை அதிகரிப்பதாக உள்ளது. திருத்துறைப்பூண்டி நகர் முழுவதிலும் 24 வார்டுகளில் 5 வது வார்டு உறுப்பினராக திமுக நகர செயலாளர் ஆர்.எஸ்.பாண்டியன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலை யில் மீதமுள்ள 23 வார்டுகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வழக்கமான உற்சாகத்தோடு சித்தாந்த தெளிவோடு தற்போதைய, நாசகர மோடி அரசிடமிருந்து நாட்டை காப்பாற்றும் கடமையுணர்ச்சியோடு சுற்றி சுழன்று பணி யாற்றி வருகிறது.  சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன், மாவட்ட செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ஜி. ரகுராமன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.சுப்ர மணியன், எஸ்.சாமிநாதன் உள்ளிட்ட தலை வர்கள் உரிய முறையில் வழிகாட்டி வருகின்ற னர். பட்டொளி வீசி பறக்கும் செங்கொடி வெற்றிக் கான கட்டியம் கூறுகிறது. சிங்களாந்தி போன்று  ஒவ்வொரு ஊரும் சிவப்பானால் நாளைய விடியல் நமதாகும்.

 - எஸ்.நவமணி