districts

img

வனத்துறையினர் தாக்கியதில் மயங்கி விழுந்த வாலிபர் போலீசார் விசாரணை

கடமலைக்குண்டு, ஜூன் 28-

     தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே  பூசாணம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 30). இவர் சொந்தமாக  மலை மாடுகள் வளர்த்து வருகிறார். கட மலை-மயிலை ஒன்றியம் மேகமலை வனச்  சரகத்திற்கு உட்பட்ட கூடாம்பாறை மலைப்  பகுதியில் மலை மாடுகளை மேய்ச்சலில்  ஈடுபடுத்துவது வழக்கம். மாடுகளை மேய்ச்சலில் விட்டு விட்டு மகேந்திரன் 10  நாட்களுக்கு ஒரு முறை பூசாணம்பட்டியில் உள்ள அவரது வீட்டிற்கு வந்து செல்வது  வழக்கம். திங்கள் கிழமை வழக்கம்போல மலைமாடுகளை மேய்ச்சலில் விட்டு விட்டு  மகேந்திரன் பைக்கில் பூசாணம்பட்டிக்கு வந்து கொண்டிருந்தார். அவருடன்  உறவி னர் சாமிநாதன் (20) உட்பட 4 பேர் ஒரே  பைக்கில் வந்து கொண்டிருந்தனர். மஞ்ச னூத்து சோதனை சாவடியில் வந்த போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் மகேந்திரனிடம் விசா ரணை மேற்கொண்டனர். அப்போது மகேந்திரன் மற்றும் வனத்துறையினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு  கட்டத்தில் வனத்துறையினர் மகேந்திரன்  மற்றும் சாமிநாதனை கம்பால் தாக்கியதாக  கூறப்படுகிறது. அப்போது மகேந்திரன் பைக்கை எடுத்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதை யடுத்து சம்பவம் தொடர்பாக சோதனைச் சாவடியில் இருந்த வனத்துறையினர் மேக மலை வனத்துறை அதிகாரிகளுக்கு தக வல் தெரிவித்தனர். மேகமலை வனச்சரகர்  அஜய் தலைமையிலான வனத்துறையினர் கோம்பைத்தொழு சாலையில் தயாராக நின்று கொண்டு அந்த வழியாக பைக்கில் வந்து கொண்டிருந்த மகேந்திரனை தடுத்து  நிறுத்தினர். பின்னர் விசாரணைக்காக வனத் துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு மகேந்திரனை வனத்ம துறையினர் தாக்கியதாக தெரிகிறது. அப்போது மகேந்திரனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதையடுத்து வனத்  துறையினர் மகேந்திரனின் உறவினர் களுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து  வந்த அவரது உறவினர்கள் மகேந்தி ரனை மீட்டு ஆட்டோ மூலம் கடமலைக் குண்டு மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் விசா ரணை மேற்கொண்ட போது மகேந்திரன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தலையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டதும் அதை தொடர்ந்து தற்போது வரை மாத்தி ரைகள் எடுத்து வருவதும் தெரிய வந்தது.  பின்னர் முதற்கட்ட சிகிச்சைகள் வழங்கப்  பட்டு மகேந்திரன் ஆம்புலன்ஸ் மூலம் தேனி  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதற்கு இடையே தகவலறிந்த  தமிழ்நாடு  விவசாயிகள் சங்கத்தினர் உடனடியாக கடமலைக்குண்டு மருத்துவமனைக்கு வந்து பாதிக்கப்பட்ட மகேந்திரனிடம் சம்ப வம் தொடர்பாக கேட்டறிந்தனர். பின்னர் வனத்துறையினரின் அத்துமீறல்களை கண்டித்து விரைவில் ஆர்ப்பாட்டம் மற்றும் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.