districts

img

சாலை ஆய்வாளர்கள் பணியை நிரந்தர அரசு ஊழியர் பணியாக அறிவித்திடுக நெடுஞ்சாலைத்துறை திறன்மிகு உதவியாளர்கள் கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, ஜூலை 3-

    தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை திறன்மிகு உதவியாளர்கள் (சாலை ஆய்வாளர்கள்) சங்க கூட்டம் திருச்சி யில் நடந்தது. கூட்டத்திற்கு சங்க மாநிலத்  தலைவர் எம்.சீனிவாசன் தலைமை வகித் தார். பொதுச் செயலாளர் சி.குருசாமி, கௌரவ பொதுச்செயலாளர் மு.மாரிமுத்து ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    கூட்டத்தில், தகுதி உள்ள சாலை ஆய்வாளர்களுக்கு இளநிலை பொறியா ளர், இளநிலை வரை தொழில் அலுவலர் (ஜே.டி.ஓ) பதவி உயர்வு வழங்க வேண்  டும். சாலை ஆய்வாளர்கள் காலிப் பணி யிடங்களை உடனே நிரப்ப வேண்டும். சாலை ஆய்வாளர்கள் பணியை நிரந்தர அரசு ஊழியர் பணியாக அறிவிக்க வேண்  டும். ஆகஸ்ட் 6 அன்று திருச்சியில் நடை பெற உள்ள சங்க மாநில மாநாட்டில் ‘சமூக  நீதியும், திராவிட மாடலும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்துவது.

     கருத்தரங்கிற்கு சிறப்பு அழைப்பாள ராக அமைச்சர் கே.என்.நேரு, திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலா ளர் சுப.வீரபாண்டியன் ஆகியோரை அழைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

     கூட்டத்தில் திருச்சி கோட்ட தலைவர் மோகன், மாநில, மண்டல நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்ன தாக திருச்சி கோட்ட செயலாளர் கார்த்தி கேசன் வரவேற்றார். மாநில பொருளாளர் சாலமன் நன்றி கூறினார்.

;