திருச்சிராப்பள்ளி, ஆக.10 - 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் சனிக்கிழமை திருச்சி பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு தொ.மு.ச பேரவை செயலாளர் ஜோசப் நெல்சன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்டத் தலைவர் சீனிவாசன், புறநகர் மாவட்டச் செயலாளர் சிவராஜன், தொ.மு.ச பேரவை தலைவர் குணசேகரன், பேரவை பொருளா ளர் ரவி, ஏஐசிடியுசி மாவட்டத் தலைவர் நட ராஜா, மாவட்டச் செயலாளர் சுரேஷ், ஐஎன்டி யுசி மாவட்டத் தலைவர் வெங்கட்நாராய ணன், ஐஎன்டியுசி அமைப்புசாரா மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்.ஆறுமுகம், ஏஐசி சிடியு ஞானதேசிகன், எச்.எம்.எஸ் ஜான்சன், எல்.எல்.எப் தெய்வீகன், எல்.டி.யூ.சி கார்த்தி கேயன் உள்பட 8 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டனர். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாத்திட வேண்டும். தொழிலாளர் நலச் சட்ட திருத்த தொகுப்புகளை திரும்பப் பெற வேண்டும். குறைந்தபட்ச சம்பளம் ரூ. 26 ஆயிரம் வழங்க வேண்டும். ஒன்றிய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்க ளில், மாநில அரசு துறை நிறுவனங்களில் உள்ள லட்சக்கணக்கான காலிப் பணியிடங் களை நிரப்ப வேண்டும். அவுட்சோர்சிங், காண்ட்ராக்ட் முறையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஆக.12 அன்று ஸ்ரீரங்கம் மற்றும் தென்னூர் பீமநகர் பகுதிகளில் பரப்புரை இயக்கம் நடைபெறுகிறது. இதை யடுத்து ஆக.14 அன்று மாலை 6 மணிக்கு உறையூர் குறத்தெருவில் கலை நிகழ்ச்சி யுடன் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.