இரவு வரை காத்திருந்து அவதி திருச்சிராப்பள்ளி, ஏப்.25 - தமிழகத்தில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு முடிந்து, தேர்வு தாள்கள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 15 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. திருச்சி மாவட்டத்தில் திருச்சி, முசிறி, மணப்பாறை உள்ளிட்ட பகுதிகளிலும் திருத்தும் பணிகள் நடந்து வருகின்றன. அந்த வகையில், திருச்சி கல்வி மாவட்டத்துக்கான தேர்வு தாள் திருத்தும் மையம் கேகே நகர் சாலை, சுந்தர் நகர் பகுதியில் அமைந்துள்ள பெரியார் மணி யம்மை நூற்றாண்டு கல்வி வளாகத் தில் செயல்பட்டு வந்தது. அங்கு பல்வேறு பகுதி பள்ளிகளைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு தேர்வு தாள்களை திருத் தும் பணியில் சுமார் 500-க்கும் மேற் பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டு வந்தனர். ஞாயிற்றுக்கிழமை, மக்களவைத் தேர்தல், தமிழ் புத்தாண்டு உள்ளிட்ட விடுமுறை தினங்களை தவிர்த்து, இதர நாட்களில் தேர்வு தாள்கள் திருத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. புதனன்று பணிகள் முழுமை அடைந்ததையொட்டி, தேர்வுத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரி யர்கள் தங்களது ஊதியத்துக்காக பள்ளி வளாகத்தில் காத்திருந்தனர். ஒரு தாளுக்கு ரூ. 8 வீதம், இதர தொகைகள் உள்பட ஒவ்வொரு ஆசிரி யர்களுக்கும் சுமார் ரூ.1500 முதல் 2000 வரை தேர்வுத்தாள் திருத்தத்திற்கான ஊதியம் வழங்கப்பட வேண்டியுள்ளது. திருச்சி பெரியார் மணியம்மை கல்வி வளாக மையத்தில் தேர்வு தாள்கள் திருத்திய 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு புதன்கிழமை மாலை 5 மணிக்கு பணிகள் முடிவடைந்த நிலை யிலும், இரவு 8 மணி வரை இவர்களுக் கான ஊதியங்கள் வழங்கப்பட வில்லை. இதனால் பொறுத்துப் பொறுத்து பார்த்த ஆசிரியர்கள், வேறு வழி யின்றி தங்களது பணி ஒருங்கிணைப் பாளர்களிடம் இது குறித்து கேட்கத் தொடங்கினர். மேலும் கொசுக் கடி உள்ளிட்ட பல்வேறு உபாதைகளுடன் இரவு 8 மணி வரை பள்ளி வளாகத்திலேயே காத்திருந்தனர். ஆனால் ஆசிரியர் களுக்கான ஊதியம் வழங்கப்பட வில்லை. இதனையடுத்து வெளியூர் களிலிருந்து தேர்வுத்தாள் திருத்தம் பணிக்காக வந்திருந்த ஆசிரியர்கள் ஊதியம் கிடைக்காமலும், தாங்கள் வெளியூர் செல்ல முடியாத நிலையி லும் அவதிக்கு உள்ளாகினர். பின்னர் ஆசிரியர்கள் ஒருங்கிணைப் பாளர்களை முற்றுகையிட்டு விவரம் கேட்ட பின்னர், நாளை (வியாழன்) பகல் 2 மணியளவில் பள்ளி வளாகத் திற்கு அனைவரும் வந்து தங்களது ஊதியங்களை பெற்றுச் செல்லலாம் என அறிவித்துள்ளனர். இதையடுத்து பள்ளி ஆசிரியர்கள் வேதனையுடன் வீடு திரும்பினர். இதேபோல் கடந்த ஆண்டும் தேர்வுத் தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவ தில் தாமதம் ஏற்பட்டதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.